38. திருமுடி சூட்டு படலம் |
இராமபிரான் இலங்கையிலிருந்து மீண்டு அயோத்தியை அடைந்து திருமகுடம் தரித்துக் கொண்டதைக் கூறும் படலம். திருவபிடேகப் படலம் எனவும் பிரதிகளில் காணப்படுகிறது. |
இராமன் தம்பியரோடு அரச கோலம் கொள்ளுதல் |
10290. | நம்பியும் பரதனோடு நந்தியம்பதியை நண்ணி, |
| வம்பு இயல் சடையும் மாற்றி, மயிர் வினை முற்றி, |
| மற்றைத் |
| தம்பியரோடு தானும் தண் புனல் படிந்த பின்னர், |
| உம்பரும் உவகை கூர, ஒப்பனை ஒப்பச் செய்தார். |
|
நம்பியும்- இராமபிரானும்; பரதனோடு - (தவமிருந்த); பரதனோடும், மற்றைத் தம்பியரோடு - மற்றைத் தம்பியர்களோடும் தானும் - தானுமாக; நந்தி அம்பதியை நண்ணி - நந்திக் கிராமமாகிய அழகிய நகரத்தை அடைந்து; வம்பு இயல் சடையும் மாற்றி - நறுமணம் கமழ்கின்ற சடையை நீக்கி; மயிர்வினை முற்றி - மயிர் கழிக்கும் செயலை முடித்து; தண்புனல் படிந்த பின்னர் - குளிர்ந்த நீரில் குளித்த பிறகு; உம்பரும் உவகை கூர - தேவர்களும் மகிழ்ச்சி கொள்ளுமாறு; ஒப்பனை ஒப்பச் செய்தார்- அழகு நலன்களைப் பொருந்துமாறு செய்யலாயினர். |
(1) |
10291. | நிருதியின் திசையில் தோன்றும் நந்தியம்பதியை |
| நீங்கி, |
| குருதி கொப்பளிக்கும் வேலோன் கொடி மதில் |
| அயோத்தி மேவ, |
| சுருதி ஒத்தனைய வெள்ளைத் துரகதக் குலங்கள் |
| பூண்டு, |
| பருதி ஒத்து இலங்கும் பைம் பூண் பரு மணித் |
| தேரின் ஆனான்.* |
|
குருதி கொப்பளிக்கும் வேலோன்- இரத்தம் பொழியும் வேற்படையாளனாகிய இராமன்; நிருதியின் திசையில் தோன்றும் |