குலிசன் | : | அரக்கன். |
குவலையாசுவன் | : | தசரதன் முன்னோன். துந்து என்பவனைக் கொன்றவன். |
கூனி | : | மந்தரை. கைகேயியின் தோழி. |
கேசரி | : | அஞ்சனையின் கணவன். அநுமனின் தந்தை. |
கைகேசி | : | தசரதன் தேவி. பரதனின் தாய். |
கைடபன் | : | கயிடன். திருமாலைப் பகைத்து அழிந்த ஓர் அரக்கன். |
கோசலை | : | தசரதன் முதல் தேவி. இராமன் தாய். |
கௌசகி | : | கோசிகரின் (விசுவாமித்திரர்) உடன்பிறந்தவள். பின்பு நதியாக மாறியவள்; கோசி. |
கௌதமர | : | அகலிகையின் கணவர். |
சகரர் | : | சாகரர் எனப்படுவார். சகரனது இரண்டாவது மனைவியிடம் பிறந்த ஆயிரம் மக்கள். |
சகரன் | : | 'விஷத்தோடு பிறந்தவன்' எனப் பொருள்படும். அயோத்தி வேந்தன். விதர்ப்பதேசத்து அரசன் மகள் விதர்ப்பை எனப்படும் கேசினியை மணந்தவன். |
சகோத்ரன் | : | வானரப்படைத் தலைவன். |
சங்கன் | : | சங்கு போன்ற நிறமுடையவன். வானரச் சேனைத் தலைவன். |
சடாயு | : | அருணனின் மகன். கழுகரசன். பல மயிர்கள் சேர்த்துத் திரித்த சடைபோன்ற ஆயுளையுடையவன். வைணவர்கள் இவனைப் 'பெரிய உடையார்' எனப் போற்றுவர். |
சடையப்பர் | : | திருவெண்ணெய்நல்லூர் வள்ளல். கம்பரை ஆதரித்தவர். |
சத்துருக்கனன் | : | தசரதன் மகன். தாய் சுமத்திரை. |
சதவலி | : | வானரத்தலைவன். முகத்தில் நூறு மடிப்புகளை உடையவன். வடதிசையில் சீதையைத் தேடச் சென்றவன். |
சதானந்தன் | : | கௌதம முனிவரின் புதல்வர். தாய் அகலிகை சனகரின் குலகுரு. |