சந்திரனை வென்றான் | : | திலீபன் என்னும் சூரியகுல வேந்தன். சந்திரனை வென்றதால் 'சந்திரஜித்' எனப் பெயர் பெற்றவன். |
சம்பரன் | : | அசுரன். 'திமித்துவசன் எனும் மறுபெயர் உள்ளவன். தண்டகாரண்யத்தில் வைஜயந்த நகரத்தில் ஆண்டு, தேவர்களை வருத்த, தசரதன் கைகேயியுடன் சென்று அவனை வென்று இந்திரனைக் காத்தான். |
சம்பாதி | : | 1. சடாயுவின் தமையன். அருணனின் மகன். சூரிய வெப்பத்தால் இழந்த சிறகுகளை, வானர வீரர் கூறிய இராம நாமத்தால் திரும்பப் பெற்றவன். கழுகரசன். சீதை உள்ள இடத்தை உரைத்தவன். 2. வீடணன் அமைச்சர் நால்வருள் ஒருவன். |
சம்புமாலி | : | பிரகதத்தன் மகன். அனுமனால் அழிந்த அரக்கன். |
சயந்தன் | : | இந்திரன் மகன். காக வடிவெடுத்துச் சீதையைத் துன்புறுத்த, இராமன் தொடுத்த பிரம்மாத்திரம் துரத்த, சரணம் வேண்டியதால் ஒரு கண்ணை மட்டும் இழந்தவன். |
சரகுல்பன் | : | வானரப் படைத்தலைவன். |
சரபன் | : | எண்கால் புள் போன்ற வலிமையுடையவன். பர்ஜ்ந்ம தேவதையின் மகன். |
சராரி | : | வானரப் படைத்தலைவன். |
சலபோசனன் | : | தசரதனுக்குச் சாபம் கொடுத்தவர். |
சவரி | : | 'சபரர்' என்னும் வேடர் குலத்தினள். இராமன் வருகை நோக்கிக் காத்திருந்து வீடு பேறு பெற்றவள். |
சனகன் | : | மிதிலை வேந்தன். சீதையின் தந்தை. |
சாந்தை | : | தசரதன் மகள். உரோமபாத மன்னனுக்கு வளர்ப்பு மகளாகத் தரப்பட்டவள். இருசிய சிருங்கருக்கு மணம் முடிக்கப்பட்டவள். |
சாம்பவன் | : | ஜாம்பவான். பிரம்மா கொட்டாவி விட்டபோது வாயினின்று கரடி வடிவில் தோன்றியவன். கரடிகளுக்கரசு. |
சார்த்தூலன் | : | இராவணனிடம் வானரசேனை குறித்துக் கூறிய ஒற்றன். |