பக்கம் எண் :

பக்கம் : 551
 
| Choolamani |

     பசிய மாலையை அணிந்த, இரமியதரன் என்று எங்கும் - இரமியதரன் என்று
யாண்டும், சீர் அணங்குறுக்கும் செய்கை - தன் புகழை அழகுபடுத்தும்
நற்செய்கையையுடைய, செஞ்சுடர்த் திலகப்பூணான் - செவ்விய ஒளியுடைய உயரிய
அணிகலன்களையுடையவனும், (எ - று.)

     தேவரவணத்தை ஆளும் மன்னனும், பைந்தாரினனும், திலகப் பூணானும் ஆகிய
இரமியதரனும், என்க. அதிர்ந்து - அதிர.
 

( 8 )

6. வேகமாரதன்
835. கண்ணிலாங் கனக மாடக் கதலிகை முகிலோ டாடி
விண்ணிலா விருண்டு தோன்றும் விசயகூ டத்து மன்னன்
வெண்ணிலா விரிந்த பூணான் வேக 1மா ரதனீண் முந்நீர்
மண்ணெலாம் வணங்க நின்ற மழகளிற் றரசோ டொப்பான்.
 

      (இ - ள்.) கண்நிலாங் கனக மாடம் - கட்பொறியைத் தன்பால் நிலவச்செய்யும்
எழிலுடைய பொன்னாலியன்ற மேனிலை மாடத்தின்மிசை, கதலிகை - கொடிகள், முகிலோடு
ஆடி - மேகங்களோடு ஆட, விண்ணிலா - விசும்பின் கண்ணதாகிய திங்கள், இருண்டு
தோன்றும் - இருள் உடையதாய்த் தோன்றுதற்குக் காரணமான, விசயகூடத்து மன்னன் -
விசய கூடம் என்னும் நகரத்திற்கு அரசனும், வெண்ணிலா விரிந்த பூணான் - வெள்ளொளி
பரந்த முத்தினாலியன்ற அணிகலன்களையுடையானும், நீள்முந்நீர் மண்ணெலாம் வணங்க
நின்ற - நீண்ட கடல் சூழ்ந்த மண்ணுலக மெல்லாம் வணங்கும்படி சிறந்து நின்றவனும்,
மழகளிற்று அரசோடு ஒப்பான் - ஐராவதத்தையுடைய இந்திரனை ஒப்பவனும், வேகமாரதன்
- வேகமாரதன் என்னும் பெயரையுடையானும், ஆகிய, (எ - று.)

     விசய கூடத்து மன்னனும், பூணானும் இந்திரன் ஒப்பானும் ஆகிய வேகமாரதனும்,
 என்க.
 

( 9 )

7. கருடாங்கதன்
836. மென்னரம் பனுக்குந் தீஞ்சொல் 2மெல்லிய லார்தம் பாடல்
கின்னரம் பிணிக்குஞ் செய்கைக் கிருதமா தனத்தைக் காப்பான்
கைநவின் றிலங்குஞ் செவ்வேற் காவலன் கருடன் சேர்ந்த
மெய்நவின் றிலங்குஞ் செம்பொ னங்கதம் விளைந்த பேரான்.
 

     (இ - ள்.) மெல் நரம்பு அனுக்கும் தீஞ்சொல் - மெல்லிய யாழின் நரம்பை வருத்தும்
இனிய சொல்லையுடைய, மெல்லியலார்தம் - மென்மைத் தன்மை மிக்க மகளிர்களின், பாடல்
- இசைப்பாடல், கின்னரம் பிணிக்கும் -


     (பாடம்) 1. வேகமா ரதனை. 2. மெல்லியவர்கள் பாடல்.