பசிய மாலையை அணிந்த, இரமியதரன் என்று எங்கும் - இரமியதரன் என்று யாண்டும், சீர் அணங்குறுக்கும் செய்கை - தன் புகழை அழகுபடுத்தும் நற்செய்கையையுடைய, செஞ்சுடர்த் திலகப்பூணான் - செவ்விய ஒளியுடைய உயரிய அணிகலன்களையுடையவனும், (எ - று.)
தேவரவணத்தை ஆளும் மன்னனும், பைந்தாரினனும், திலகப் பூணானும் ஆகிய இரமியதரனும், என்க. அதிர்ந்து - அதிர.
( 8 )
6. வேகமாரதன்
835.
கண்ணிலாங் கனக மாடக் கதலிகை முகிலோ டாடி விண்ணிலா விருண்டு தோன்றும் விசயகூ டத்து மன்னன் வெண்ணிலா விரிந்த பூணான் வேக 1மா ரதனீண் முந்நீர் மண்ணெலாம் வணங்க நின்ற மழகளிற் றரசோ டொப்பான்.
(இ - ள்.) கண்நிலாங் கனக மாடம் - கட்பொறியைத் தன்பால் நிலவச்செய்யும் எழிலுடைய பொன்னாலியன்ற மேனிலை மாடத்தின்மிசை, கதலிகை - கொடிகள், முகிலோடு ஆடி - மேகங்களோடு ஆட, விண்ணிலா - விசும்பின் கண்ணதாகிய திங்கள், இருண்டு தோன்றும் - இருள் உடையதாய்த் தோன்றுதற்குக் காரணமான, விசயகூடத்து மன்னன் - விசய கூடம் என்னும் நகரத்திற்கு அரசனும், வெண்ணிலா விரிந்த பூணான் - வெள்ளொளி பரந்த முத்தினாலியன்ற அணிகலன்களையுடையானும், நீள்முந்நீர் மண்ணெலாம் வணங்க நின்ற - நீண்ட கடல் சூழ்ந்த மண்ணுலக மெல்லாம் வணங்கும்படி சிறந்து நின்றவனும், மழகளிற்று அரசோடு ஒப்பான் - ஐராவதத்தையுடைய இந்திரனை ஒப்பவனும், வேகமாரதன் - வேகமாரதன் என்னும் பெயரையுடையானும், ஆகிய, (எ - று.)
விசய கூடத்து மன்னனும், பூணானும் இந்திரன் ஒப்பானும் ஆகிய வேகமாரதனும், என்க.