[இந்திரவுலக
நிகழ்ச்சி கூறுகின்றமையின் இப்பகுதி
''இந்திர காண்டம்'' என்னும் பெயர்த்து.]
|
சிவசத்தி
வணக்கம்
எழுசீர்க்
கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் |
412. |
இம்மை
அம்மை மறுமை என்ன
இசைத்து மாமறை கூறிய
மும்மை யும்தெளி வுற்றுநெஞ் சினின்
முக்கு றும்பும்அ றுத்திடும்
செம்மை அன்பர் மனத்து வைகிய
தெய்வ நாயகர் தேவிமற்
றெம்மை ஆளுடை அம்மை தாள்கள்
இரண்டும் ஏத்தி இறைஞ்சுவாம்.
|
(இ
- ள்.) இம்மை அம்மை மறுமை என்ன இசைத்து மாமறை
கூறிய மும்மையும் - இப்பிறப்பு முற்பிறப்பு வருபிறப்பு என்று வகுத்துச்
சிறந்த வேதங்கள் கூறிய மூன்று பிறவிகளையும், தெளிவுற்று - தெளிந்து,
நெஞ்சினின் முக்குறும்பும் அறுத்திடும் - மனத்திலுள்ள முக்குற்றங்களையும்
நீக்குகின்ற, செம்மை அன்பர் மனத்து வைகிய - செம்மை நெறியிற் சிறந்த
அன்பு வைக்கும் அடியார் மனத்தில் தங்குகிற, தெய்வ நாயகர் தேவி
-தெய்வநாயகராகிய சிவபெருமானின் தேவி, எம்மை ஆளுடை அம்மை -
எம்மை அடிமையாகக் கொண்டுள்ள சத்தியின், தாள்கள் இரண்டும் -
திருவடி இணையை, ஏத்தி இறைஞ்சுவாம் - துதித்து வணங்கக்கடவோம்.
மும்மையும்
உம்மை முற்றும்மை; மாமறை: உரிச்சொற்றொடர்; மூன்று
+ குறும்பு = முக்குறும்பு; முக்குறும்புகள் - ஆணவம், மாயை, கன்மம்
என்ற மும்மலங்கள். மற்று : அசை.
(1)
|
கவிக்
கூற்று |
413. |
கொற்ற
வாசவன் முன்வ சிட்டன்
உரைத்ததற் கெதிர் கோசிகன்
சொற்ற வாறு முடிக்க வன்மை
தொடங்கி நாடு விலங்கினால்
செற்ற வாறும் உருத்து வண்திரி
சங்கு மைந்தன் எழுந்துகான்
உற்ற வாறு நிகழ்ந்த வாறும்
உணர்ந்த வாறு விளம்புவாம். |
|