பக்கம் எண் :


 நிரையத்துளறவுரைச்சருக்கம் 437


 

பத்தாவது :

நிரையத்துளறவுரைச்சருக்கம்.

930. சக்கரப் பிரபை தன்பா னிற்பதற் கார்வம் வைத்துச்
    சக்கரப் பிரபை தன்பா னின்றவன் றன்னைக் காணா
    மிக்கவெந் துயர முற்றே னவன்றுயர் நீங்க வெண்ணி
    யக்கணத் தவனைக் கூடி யறிதியோ வென்னை யென்றேன்.

     (இ-ள்.)  (மேற் கூறியபடி தர்மபோதனை செய்ய நாடி), சக்கரப்
பிரபை   தன்  பால் - சக்கராப் பிரபையென்னும் இரண்டாநரகத்தில்,
நிற்பதற்கு - போய் ஜனித்து நிற்பதற்கேதுவாகிய, ஆர்வம் - பரிக்கிரக
வாஞ்சையை,   வைத்து    -    மனதில்   தரித்த பாவகர்மத்தினால்,
சக்கரப்பிரபை தன் பால் - சர்க்கராப்பிரபை யென்னும் அவ்விரண்டா
நரகத்தில்,    நின்றவன்    தன்னை - திரவிய கர்ம பந்தனாகி நின்ற
அந்நாரகனை,   காணா - கண்டு,   மிக்க   - மிகுதியாகிய, வெம் -
கொடுமை      பொருந்திய,    துயரம்   -  துக்கத்தை, உற்றேன் -
அடைந்திராநின்றவனாகிய   நான், அவன் - அந்நரகனுடைய, துயர் -
துக்கமானது, நீங்க -நீங்கும்படி, எண்ணி - ஆலோசித்து, அக்கணத்து
- அச்சமயத்திலேயே,    அவனைக் கூடி - அவனது சமீபஞ் சேர்ந்து,
(அவனை    நோக்கி, நாரகனே!). என்னை - என்றனை, அறிதியோ -
தெரிவாயோ!,   என்றேன் - என்று பூர்வசம்பந்த விருத்தாந்தங்களைச்
சொல்ல வாரம்பித்தேன், எ-று.                              (1)

931. மதுரையா னாக வென்பால் வாருணி மகளாய் நீபின்
    சதுரமை தத்தை யானேன் மகன்பூர சந்திர னானாய்
    விதியினா னோற்றென் னோடு மாசுக்கம் புக்கு விஞ்சைப்
    பதியிற்சீ தரையா னேனென் மகளிசோ தரையு மானாய்.

     (இ-ள்.) (அவ்வாறு   சொல்ல ஆரம்பித்து நாரகனே!), யான் -
நான்,   மதுரையாக     - (சில பவங்களுக்கு முன்) மதுரையென்னும்
பெயரையுடைய    பிராம்மணஸ்த்ரீயாக,     (அப்போது), என்பால் -
என்னிடத்தே,   நீ - நீ,  வாருணி - வாருணி யென்னும் பெயருடைய,
மகளாய்  - புத்திரியாகப் பிறக்க, பின் - மறு சன்மத்தில், (நான்), சதுர்
அமை - அழகமைந்த, தத்தையானேன் - இராமதத்தை யென்னும் ராஜ
ஸ்திரீயாயினேன்,   (அப்போது  நீ),   மகன் - எனக்குப் புத்திரனாகி
பூரசந்திரன்    ஆனாய்   - பூர்ணச்சந்திரனென்னும், பெயருடையவன்
ஆனாய்    (அப்போது),  என்னோடும் - என்னுடனே, விதியினால் -
கிரமத்தின்படியினால், நோற்று - விர