முன்னோர் ஊழியில் பிரமன் முன் படைத்த உலகம் முழுதும் நம்மால் ஒடுக்கப் பெற்றது. பொன்னொக்கும் தேமலையும், பொன்னணிகளையும் தாங்கிய கொங்கைகளையும் நாகணவாய்ப் பறவையின் சொல்லொக்கும் இனிய மொழியினையுமுடையாய்! அக் காலத்தில் தருமதேவதை யாவும் அழிந்தமையை ஊன்றி நோக்கி, நில்லாஉல கத்துளவாய சரிப்ப நிற்ப எல்லாம்அழி வுற்றன யானும் இறப்ப லேர்என் றல்லாந்தினிச் செய்வகை யாதென் றிறைஞ்சி நம்பாற் கொல்லேறுரு வங்கொடு வந்தது போற்றி யென்ன. 75 | நில்லாமையை இயல்பாகவுடைய இயங்கியற் பொருள்களும் நிலையியற் பொருள்களும் ஆகிய யாவும் அழிந்தன. தருமதேவதை யானும் அழிவேனோ! என்று மனம் கொட்புற்று இப்பொழுது செயத்தக்கது யாது? என்று வணங்கி நம்மிடத்து விடை வடிவத்துடன் எதிரே வந்து போற்றி நிற்ப, கண்டாம் அதனைக் கவலாதிஎன் றூர்தி யாக்கிக் கொண்டாம் கொளப்பெற் றுலவாக்களி கூர்ந்ததாக வண்டார் அளகக் கொடிஅவ்விருள் மாண்ட காலைத் தண்டா அருளால் அதற்கின்னது சாற்ற லுற்றேம். 76 | ‘அதனைக்கண்டு வருந்தாதே என அருள் செய்து விடையாகக் கொண்டனம், கொண்டமையால் கெடாத மகிழ்ச்சி மீக்கூர்ந்ததாக, மீள உலகச் சிருட்டி நிகழும் காலை, தாரணிந்த கூந்தலையுடைய, கொடியே! நீங்காத திருவருளால் அவ்விடைக்கு இதனைக் கூறலுற்றோம்.’ தரிப்பித்தலின் நீதரு மம்தரிப் பித்தி டாமை தெரிப்பிக்கும் அதன்ம மெனப்பெயர் செப்பு மால்எம் பொருட்டுப்புரி பாவமும் புண்ணிய மாக்கி எம்பால் விருப்பற்றவர் செய்அற மும்மற மாக்கு விப்பாய். 77 | ‘நீ தரிப்பித்தலினால் (தாங்குவித்தலால்) தருமம் ஆவாய். தரிப்பிக்காமையை உணர்த்தும் அதன்மம் எனும் பெயர், எம்மை நோக்கிச் செய்யப்படும் பாவத்தையும் புண்ணியம் ஆக்குவித்து எம்மை நினையாதார் செய்யும் அறங்களையும் பாவமாக்குவிப்பாய்.’ இவ்வேற்றிட பப்படி வத்துடன் எங்கும் எம்முன் செவ்வேவதி கென்றருள் செய்திடும் நல்வ ரம்பெற் றவ்வாறு நமக்கெதிர் நித்தலும் கைகும் அங்கேழ்ச் செவ்வாய்க்கரு மென்குழல் வெண்ணகைச் செம்பொற்பூணாய் | இந்த இடப வடிவத்துடன் எம் சந்நிதியில் எவ்விடத்தும் செம்மைபெற இருப்பாய் என்றருள் செய்ய அந் நல் வரத்தைக் |