பக்கம் எண் :


இராவண காவியம் 243

   
        28.     தாய ருந்துமென் றூட்டுபா லுண்டவர் தாயால்
               சேய ருந்துமென் றூட்டிய தாய்மொழி தேறா
               தேயி ருந்துவா ணாள்வறி தேகழித் திருத்தல்
               வாயி ருந்தும்பே சாமுழு வூமையின் வகையே.

        29.     இத்த கையமேம் பாடுற வீறறி யாவின்
               பத்த தாயவொண் கலையையாண் பெண்ணிரு பாலும்
               ஒத்த தாயராய்க் கற்றறி வுற்றிடச் செய்தல்
               அத்த கையகாப் புடையர்நீங் காக்கட னாகும்.

        30.     கற்றி லாதமக் கட்கடை யேதுயர் காலும்
               குற்ற மென்பத னுறைவிட மாதலாற் குற்றம்
               அற்று மக்களின் புற்றுவாழ்ந் திடச்செய வாவும்
               வெற்றி வேலவர் கல்வியைப் பெருக்குதல் வேண்டும்.

        31.     அப்பெ ருந்தொழிற் கரசர்சிற் றரசரே யன்றி
               ஒப்ப ருந்தமிழ்ப் புலவருஞ் செல்வரு முரிமை
               செப்ப ருந்தமிழ் மக்களெல் லோருமே சேர்ந்து
               தப்ப ருந்தொழி லெனமுனைப் பொடுசெயல் தகவாம்.

        32.     பொருளு மேவலு மாண்மையும் பொருந்தியே யிருந்தும்
               தெருளு நூலறி விலாதவர் செயலொடு வாழ்தல்
               இருளு மப்புமீ ரெழிலியு மிணைந்தவோ ரிரவில்
               மருளு மூமுநல் வதிருடைக் குருடுசெல் வழக்கே.

        33.     பழியைப் போற்றுதல் மூடர்கள் செயல்பழி யொழியும்
               வழியைப் போற்றுதல் மேலவர் செயல்வழி வருதாய்
               மொழியைப் போற்றுதல் முகத்தினுக் கழகுசெய் யிரண்டு
               விழியைப் போற்றுதல் போன்மென மேலைநூல் விளம்பும்.

        34.     கண்ணி ரண்டென்ப வெண்ணையு மெழுத்தையும் கற்றோர்
               எண்ணெ ழுத்துளா ரறிவுக்க ணொன்றுட னேமுக்
               கண்ண ராகியே மக்களின் றலைமையைக் காண்பர்
               எண்ணெ ழுத்தறி விலாரையெவ் வினத்தினிற் சேர்ப்பாம்.
-------------------------------------------------------------------------------------------
        30. ஆவுதல் - விரும்புதல். 31. தப்பு அரும் - தவற முடியாத. 32. தெருளல் - தெரிதல். மப்பு - மந்தாரம். ஈர்எழிலி - மழை கொண்ட முகில். மருள் - மயக்கவுணர்வு. வதிர் - செவிடு. அறிவு மயக்கமும் ஊமுஞ் செவிடுமுடைய குருடு. வழக்கு - முறைமையாகும்.