23

எத்துணை முதிர்ந்துள்ளான்என்பதைக் கவிச்சக்கரவர்த்தி ஊர் தேடு
படலத்தில் மிகச் சிறப்பாக எடுத்துக் காட்டுகிறான். இராகவனை முதலில்
பார்த்த வினாடியி லிருந்தே தன்னைப் பறிகொடுத்துவிட்டு அவனுடைய சுக
துக்கங்களில் முழுவதுமாகப் பங்கு கொண்டு பணி புரிந்துவரும் அனுமனைப்
பொறுத்தமட்டில் இராமனுக்கு இடுக்கண் செய்த இராவணனும் அவனுடைய
நாடாகிய இலங்கையும் அந்நாட்டு மக்கள் ஆகிய அரக்கரும் முழுப்
பகைவர்கள் ஆகிவிட்டார்கள். இராமன் என்ற அரசனுக்கும் இராவணன் என்ற
அரசனுக்கும் உள்ள பகையன்று இது. இராகவன் மனைவியை வஞ்சித்துக்
கவர்ந்து சென்றமையால் மிகக் கீழோர் செயலில் ஈடுபட்டுவிட்டான்
இராவணன். இந்த மாபெரும் தவறைச் செய்தவன் சாதாரண பகைவன்
அல்லன். எனவே, அவன்மாட்டு அனுமன் பகைமை பாராட்டுவது
நியாயமானதே ஆகும். காழ்ப்பு உணர்ச்சி, வெறுப்புணர்ச்சி, சினம்
ஆகியவற்றோடு நிரம்பிய மனநிலையில்- தான் அனுமன் இலங்கையுள்
புகுகிறான். என்றாலும் என்ன ? இரவு நேரத்தில் உறங்கிக் கிடக்கின்ற
கும்பகருணன் (4955), வீடணன் (4969), இந்திரசித்தன் (4972), இராவணன்
(5037) ஆகிய நால்வரையும் அவரவர் உறங்குமிடத்தில் மறைந்துநின்று
காணுகிறான். இந்த மன நிலையிலும் முதன்முதலாக இந்நால்வரைப்
பார்க்கும்பொழுது அவர்கள் ஆற்றல் முதலியவற்றைத் துல்லியமாக எடை
போட்டுவிடுகிறான். உறங்குகின்ற கும்பகர்ணனைப் பார்த்து, அவன் யாரென்று
அறிந்துகொள்ளாத நிலையிலும் சுத்த வீரனாகிய அனுமன் கும்பகர்ணனை மிக
அற்புதமாக எடை போடுகிறான். 'அரக்கர் கோனாகிய இராவணனோ இவன்'
என்று நினைத்து அனுமன் அந்த எண்ணத்தை ஒதுக்கி இவன் யாரென்று
தெரியாவிட்டாலும் திரிமூர்த்திகளில் ஒருவருக்கு ஈடு சொல்லக்கூடியவன்
இவன் என்ற கருத்தில், ஏவனோ இவன் ? மூவரின் ஒருவன் ஆம் ஈட்டான்
(4964) என்று பேசுவதால் பகைவரைக் குறைத்து மதிப்பிடும் பண்பு
அனுமனிடம் இல்லை என்பதை உணர்கிறோம். அடுத்தபடியாக அவன்
காண்பது வீடணனை ஆகும். வீடணன் யார் என்பதும், அவன் அறவாழ்வை
மேற்கொண்டவன் என்பதும் அனுமனுக்குத் தெரியாது. இருந்தும் அவனது
மனைக்குள் புகுந்தவுடன் அந்த வீட்டிலுள்ள எண்ண அதிர்வுகள்
தூய்மையானவை என்பது புலன் அடக்கம் மேற்கொண்ட அனுமனுக்கு உடனே
புரிந்து