இரப்போர்கடல் ஈந்தே கடந்தான் - அவ்வரசன். தன்னிடம் யாசிப்பவர்கள் என்னும் கடலை ‘ஈதல்’ என்றும் தெப்பம்கொண்டு கடந்தான்;அறிவு என்னும் அளக்கர் எண்ணில் நுண்நூல் ஆய்ந்தே கடந்தான் - அறிவு என்ற கடலை. எண்ணற்ற நுண்ணிய நூலாராய்ச்சி என்ற படகு கொண்டு தாண்டினான்; பகைவேலை வாளால் காய்ந்தே கடந்தான்- பகைவர்கள் என்ற கடலை. வாள் முதலிய படைத்துணை கொண்டு. கோபம்காட்டி நீந்தினான்; திருவின்தொடர் போகபௌவம்- செல்வ வளத்தாலே தொடர்ந்து வரும் இன்பம் என்னும் கடலை; கருத்து முற்றத் தோய்ந்தே கடந்தான்- மனம் நிறைவு பெறும்படி துய்த்தே கடந்தான். தயரதன். தன்னை நாடிவரும் யாசகர்களை முனியாது. கொடுத்து அனுப்பும் இயல்புடையவன். உயர்ந்த நூல்களைக் கற்றுத் தெளிந்த அறிவுடையவன். எத்துணைப் பகைவர் திரண்டு வரினும் வாள் கொண்டு. கோபம்காட்டி. வெல்லும் வீறுடையவன். உலக இன்பங்களை- மனம் நிறைவுறுமாறு. துய்த்து வாழ்ந்தவன் என்பது கருத்து. அளக்கர். வேலை. பௌவம் என்பன. கடல் என்னும் பொருள் கொண்ட ஒரு பொருட் பன்மொழி. பகை: சாதி யொருமைப்பெயர். பகையரசை உணர்த்தும். இரப்போர்கடல். அறிவென்னும் அளக்கர். பகைவேலை. போக பௌவம் என்பன உருவகங்கள். போக பௌவம் இன்பக் கடல் என்று பொருள் கொண்ட வடமொழித் தொடர். 5 |