என்றனர் இடர் உழந்து இறைஞ்சி ஏத்தலும் - என்று கூறியவர்களான தேவர்கள் துன்பத்தால் வருந்தி. திருமாலைத் துதித்து வணங்கிடவும்; மன்றல் அம் துளாவினான்- மணமும். அழகும் உடைய துழாய் மாலையணிந்த திருமால்; வருந்தல் ‘வஞ்சகர்தம் தலை அறுத்து தாரணிக்கு இடர் தணிப்பென்- (அத்தேவர்களை நோக்கி) வருந்தாதீர்கள்! வஞ்சக அரக்கர்களின் தலைகளைத் துணித்து உலகத்தின் துன்பத்தைத் தணிப்பேன்; ஒன்று நீர் கேண்ம் என உரைத்தல் மேயினான் - அதற்குரியதொன்றைக் கேளுங்கள் என்று சொல்ல. ஆரம்பித்தான். மன்றல்: மிகுமணம். வருந்தல்: அல்லீற்று எதிர்மறை வியங்கோள் எதிர் மறை. கேளும் என்பது கேண்ம் என வந்தது விகாரமும் சந்தியுமாம். ‘ம்’: மகரக் குறுக்கம். வஞ்சகர்: மாயத்தொழில் வல்லோர். 19 |