பக்கம் எண் :

  நாட்டுப் படலம்43

சோற்றின்- கண்ட சருக்கரை இடையிடையே செறிந்துள்ள சோற்றுடனும்;
தம்  தம்  இல்  இருந்து-  தங்கள்   தங்கள்   வீட்டில்   இருந்து;
விருந்தொடும்   தமரினோடும்    தாமும்  -     விருந்தினருடனும்
உறவினருடனும்   கலந்து   தாங்களும்;  அந்தணர்  அமுத  உண்டி-
தேவர்களுக்கு    உரிய   அமுதம்   போன்ற  உணவினை;  அயிலும்
அமலைத்து
- உண்ணுகின்ற ஆரவாரம் உடையது (அந்தக் கோசலம்)

‘மூட     நெய் பெய்து’ என்ற கோதையார் ஆட்சி கருதத்  தக்கது.
சிவப்பு   நிறம்  வரும்  வரையில்  காய்ச்சிய   பாலில்   பிரையிட்டது
செந்தயிர்.  ‘தாமும்  விருந்தொடும்   தமரினோடும்’   என்ற  செய்யுள்
தொடர்  இல்லறத்தார் முறைமை நோக்கி ‘விருந்தொடும்  தமரினோடும்
தாமும்’  என நிரல் மாற்றி உரை  கொள்ளப்பட்டது. அந்தணர் இங்கே
தேவர்.  ‘தம் இல் இருந்து தமது பாத்து’  உண்ணுதலும். தென்புலத்தார்
தெய்வம்.  விருந்து ஒக்கல். தான்’ என்று  அமைதலுமாகிய  திருக்குறள்
நெறியினை நினைவூட்டுவது இப்பாடல்.                         22

                              கோசல நாட்டுச் செல்வப் பொலிவு

கலி விருத்தம்
 

54.

பருவ மங்கையர் பங்கய வாள் முகத்து
உருவ உண் கணை. ‘ஒண் பெடை ஆம்’ எனக்
கருதி. அன்பொடு காமுற்று. வைகலும்.
மருத வேலியின் வைகின. வண்டுஅரோ.
 

வண்டு-  (ஆண்) வண்டுகள்; பருவ மங்கையர்- இளம் பெண்களின்;
பங்கய  வாள்  முகத்து-  தாமரை  போன்ற  ஒளிகொண்ட   முகத்தில்
உள்ள;     உருவ     உண்கணை-     அழகுடையனவும்     மை
இடப்பட்டனவுமாகிய  கண்களை;  ஒண் பெடை  ஆம் எனக் கருதி-
ஒளி   கொண்ட  பெண்  வண்டுகள்  என்று  நினைத்து;  அன்பொடு
காமுற்று
-   அன்போடு   விரும்பி;  கைகலும்-  நாளெல்லாம்;  மருத
வேலியின் வைகின- மருத நிலத்திலே தங்கின.

வண்டுகளைப்     பெண்களின் கண்களுக்கு உவமை  கூறுதல் மரபு;
அந்த  இலக்கிய  மரபை  அடிப்படையாகக் கொண்டது  இக் கற்பனை.
பெண்களின்  கண்கள்   என்பது   தெரியாமல் பெண் வண்டுகள் எனக்
கருதி  ஆண்  வண்டுகள்   நாளெல்லாம்  காத்திருப்பதற்குக்  காரணம்
தக்க செவ்வி/தருணம் வாய்க்க  வேண்டும்  என்பதே. இலவு காத்த கிளி
போல ஏமாறப் போவது தெரியாமல் மயங்கின. இது மயக்க அணி.

கணை + கண்ணை: தொகுத்தல் விகாரம்                     23
 

55.

வேளை வென்ற முகத்தியர் வெம் முலை.
ஆளை. நின்று முனிந்திடும். அங்கு ஓர் பால்;
பாளை தந்த மதுப்பருகி. பரு

வாளை நின்று மதர்க்கும் மருங்கு எலாம்.
 

அங்கு ஓர் பால்- அந்த மருத நிலத்தின் ஒரு பக்கத்தில்; வேளை
வென்ற   முகத்தியர்
-  மன்மதனையும்  வெற்றி   கொண்ட  முகத்தை
உடைய  (உழவர்  குலப்)  பெண்களின்; வெம்  முலை- விருப்பத்தைக்
கிளரச்   செய்யும்    மார்பகங்கள்:  ஆளை   நின்று  முனிந்திடும்-
ஆண்களை