பக்கம் எண் :

46பால காண்டம்  

தோயும்   வெண் தயிர் - தோய்ந்துள்ள வெண்மையான தயிரைக்
(கடைகின்ற);  மத்து  ஒலி  துள்ளவும்-  மத்தின்  ஓசை  விட்டுவிட்டு
ஒலிக்கவும்;   ஆய   வெள்வளை-   (தம்  கைகளில்  அணிந்துள்ள)
நுட்பமான வேலைப்பாடுடைய   வெண்ணிறச் சங்கு வளையல்கள்; வாய்
விட்டு  அரற்றவும்
-  வாய்திறந்து  கத்துவதுபோல ஒலிக்கவும்; தேயும்
நுண் இடை
- மெலிந்த சிறிய இடை; சென்று வணங்கவும்- முன்புறமாக
வளையவும்;   ஆய   மங்கையர்-   இடைக்குல   மகளிர்;  அங்கை
வருந்துவர்
- அழகிய கைகள் வருந்தும்படி கடைவார்கள்.

வெண்டயிர் - கடைதலுக்கும்
செந்தயிர் உண்டலுக்கும் உரியன.  

துள்ளுதல்:     விட்டுவிட்டு ஒலித்தல். ஆய் வளை: நுட்பமான
வேலைப்பாடு  கொண்ட  வளையல்கள்:  ‘ஓய்தல் ஆய்தல் நிகழ்த்தல்
சாஅய்   ஆவயின   நான்கும்   உள்ளதன்   நுணுக்கம்’   என்பது
தொல்காப்பியம். (தொல். சொல். உரி. 32)

தன்மை நவிற்சியணி                                   28 
 

60.தினைச் சிலம்புவ. தீம் சொல் இளங் கிளி;
நனைச் சிலம்புவ. நாகு இள வண்டு; பூம்
புனல் சிலம்புவ. புள் இனம்; வள்ளியோர்
மனைச் சிலம்புவ. மங்கல வள்ளையே.
 

தீம்  சொல் இளங்கிளி- இனிய சொற்களைப் பேசும் இளங்கிளிகள்;
தினைச்  சிலம்புவ
-  தினைப்  புனங்களிலே  ஒலிப்பன;  நாகு  இள
வண்டு
-   இளமையான   வண்டுகள்;   நனைச்   சிலம்புவ-   மலர்
அரும்புகளில்  ஒலிப்பன;  புள்  இனம்-  பறவைகளின் கூட்டம்; பூம்
புனல்  சிலம்புவ
-  நீர்  நிலைகளில்  ஒலிப்பன; வள்ளியோர் மனை-
கொடையாளர்  இல்லங்களில்; மங்கல வள்ளை சிலம்புவ- மங்கலமான
உலக்கைப் பாடல்கள் ஒலிப்பன.

தினைப்புனங்களில்     கிளிப்பாட்டு:  மலர் அரும்புகளில் வண்டின்
பாட்டு:  நீர்நிலைகளில் பறவைப் பாட்டு;   வள்ளல்களின் இல்லங்களில்
உலக்கைப்   பாட்டு;  ஆக.  எங்கணும்    இசைமயம்.  நனை:  இளம்
அரும்பு.  நாகு-இளமை;  ஒரு பொருட்   பன்மொழி. மகளிர் நறுமணப்
பொடி  முதலியன  இடிக்கும்  போது    தம் தலைவனைச் சிறப்பித்துப்
பாடும் பாட்டு வள்ளைப் (உலக்கை) பாட்டு.

‘புனைச் சிலம்புவ’ என்றொரு பாடமும் உண்டு.

எதுகை  நோக்கில்  இப்பாடம்  சிறப்புடையது.  புனை  எனினும் நீர்
என்பதே பொருள். (பெருங். 4:7.75)

சிலம்புவ......சொற்பொருட் பின்வரு நிலையணி.                   29