கடைசியர் குரவை - மருத நில மாதர்களின் குரவைக் கூத்துப் பாடல்; கொன்றை வேய்ங்குழல் கோவலர் முன்றிலில்- கொன்றையாலும் மூங்கிலாலும் ஆகிய குழல்களை உடைய இடையர்களின் வீட்டு முற்றங்களில்; கன்று உறக்கும்- கன்றுகளை உறங்கச் செய்யும்; நுளைச்சியர் செவ்வழி- நெய்தல் நில மகளிர் பாடும் செவ்வழிப் பண் கொண்ட பாடல்; புன் தலைப் புனம்- சிற்றிடம் கொண்ட புனங்களிலும்; காப்புடைப் பொங்கரில்; காவல் உடைய சோலைகளிலும்; சென்று இசைக்கும்- பரந்து சென்று ஒலிக்கும். கொன்றைக் கனியையும் மூங்கிலையும் துருவித் துளையிட்டுக் குழல் செய்வர். உறக்கும்-உறங்கச் செய்யும். செவ்வழிப் பண் காலை நேரத்துக்கு உரியது. முல்லையும் (கொன்றை) மருதமும் (கடைசியர்) நெய்தலும் (நுளைச்சியர்) கலந்த திணை மயக்கம். முன்றில்-இல்முன் என்தன் போலி. உறக்கும்-பிறவினை. 34 |