பக்கம் எண் :

54பால காண்டம்  

74.

இடைஇற மகளிர்கள். எறி புனல் மறுகக்
குடைபவர். துவர் இதழ் மலர்வன. குமுதம்;
மடை பெயர் அனம் என மட நடை. அளகக்
கடைசியர் முகம் என மலர்வன. கமலம்.
 

இடை இற. மகளிர்கள் எறிபுனல் மறுக. குடைபவர்-தங்கள இடை
ஒடிவது  போலத்  தோன்றும்  பெண்கள்  அலையடிக்கும்  நீர்  கலங்க
நீராடுபவர்களின்;  துவர்  இதழ்  என  -  பவளம்  போன்ற  சிவந்த
உதடுகளைப்   போல;   குமுதம்   மலர்வன   -   குமுத  மலர்கள்
மலர்வனவாகும்;  மடைபெயர்  அனம்  என-  நீர்மடைகளில் வாழும்
அன்னங்களைப்  போல; மடநடை அளகம் - மெல்லிய  நடையையும்.
அழகிய  கூந்தலையும்  உடைய;  கடைசியர்  முகம் என- அந்நாட்டு
உழத்தியரின்  முகம்  போல;  கமலம்  மலர்வன - தாமரை மலர்கள்
மலர்வனவாகும்.

குமுதம்     பெண்களின் வாயிதழ்களைப் போல மலர்ந்தன. தாமரை
உழத்தியரின்   முகம்   போல   மலர்ந்தன   என.     உவமானத்தை
உவமேயமாகக் கூறியதால் ‘எதிர்நிலையணி’ யாகும்.               43
 

75.

விதியினை நகுவன. அயில் விழி; பிடியின்
கதியினை நகுவன. அவர் நடை; கமலப்
பொதியினை நகுவன. புணர் முலை; கலை வாழ்
மதியினை நகுவன. வனிதையர் வதனம்.
 

வனிதையர் அயல் விழி - அந்நாட்டுப் பெண்களின் வேல் போன்ற
கண்கள்;  விதியினை நகுவன- நான்முகனைப் பழிப்பன; அவர் நடை
பிடியின்  கதியினை  நகுவன
- அவர்களது நடை பெண் யானைகளின்
நடையைப் பழிப்பன;  புணர்  முலை கமலப் பொதியினை நகுவன -
அப்பெண்களின்    இணைந்துள்ள  மார்புகள்  தாமரை அரும்புகளைப்
பழிப்பன;  வதனம்   கலைவாழ்  மதியினை  நகுவன-  அவர்களது
முகங்கள் கலைகளை உடைய சந்திரனைப் பழிப்பனவாகும்.

பெண்களின்    விழிக்கு வேலும். நடைக்குப் பெண்யானை நடையும்.
தனங்களுக்குத்       தாமரை   அரும்பும்.   முகத்துக்குச்   சந்திரனும்
உவமைகளாகச்    சொல்லப்படுவன.  இங்கு  வேல்  முதலியவை  விழி
முதலியவைகளைவிட    விஞ்சியிருப்பதால் அவைகளை நகுவனவாயின
என்றது; எதிர்நிலையணியாம்.

படைத்த  நான்முகனே மயங்கவல்ல விழிகளாதலின் தமக்கு நிகராகா
(நான்முகனை)     கண்கள்   பழிப்பனவாம்.  மலர்வதும்  குவிவதுமான
தாமரை     முகையைப்   போலல்லாது   என்றும்  ஒரு  தனிமையாய்
இருக்கும்  தனங்கள்  தாமரை    முகைகளைப்  பழித்தன.  தேய்தலும்
வளர்தலுமாக  உள்ள  மதி  -   என்றும் மலர்ந்தே உள்ள முகத்துக்கு
நிகராகா  தாதலின் மதியை முகம் பழிப்பன வாயின என்று கூறியதன்
நயம் உணர்ந்து மகிழ்தற்குரியது.                               44