பக்கம் எண் :

  நாட்டுப் படலம்55

76.

பகலினொடு இகலுவ. படர் மணி; மடவார்
நகிலினொடு இகலுவ. நளி வளர் இளநீர்;
துகிலினொடு இகலுவ. சுதை புரை நுரை; கார்
முகலினொடு இகலுவ. கடி மண முரசம்.
 

படர்மணி-பரவிக் கிடக்கின்ற மணிகள்; பகலினொடு இகலுவ- சூரிய
ஒளியுடன்  மாறு  கொண்டொளிர்வன;  நளிவளர்  இளநீர்- குளிர்ந்த
இளநீர்கள்; மடவார் நகிலினொடு இகலுவ- பெண்களின் தனங்களோடு
மாறுபட்டு விளங்குவனவாம்

அந்நகர     மாதர்  அணியும்  அணிகலன்களில்      பதித்துள்ள
இரத்தினங்கள்  சூரியன் ஒளியை விட மிக்கு விளங்குவன.   அவர் தம்
முலைகள்  செவ்விளநீர்களை  விட  வடிவத்தால் திரட்சியால்   சிறந்து
விளங்குவன.  அவர்கள்  அணியும் நூலாடைகள்   பால் நுரையை விட
மெல்லியனவாக நொய்யனவாக விளங்குவன.   மணமுரசு ஒலியோ மழை
மேகத்தின்   குமுறு   குரலினும்   மிக்கு    விளங்குவது.  மாறுபடல்-
போட்டியிட்டும் தோல்வி காணுதல். நளி-பெருமை. செறிவு.         45
 

77.

காரொடு நிகர்வன. கடி பொழில்; கழனிப்
போரொடு நிகர்வன. புணர்மலை; அணை சூழ்
நீரொடு நிகர்வன. நிறை கடல்; நிதி சால்
ஊரொடு நிகர்வன. இமையவர் உலகம்.
 

காரொடு   நிகர்வன கடிபொழில்- மேகங்களுடன்  அந்தநாட்டுச்
சோலைகள் ஒப்பனவாகும்; கழனிப் போரொடு நிகர்வன புணர்மலை-
வயல்களிலே    குவித்து   வைத்துள்ள   நெற்போருடன்   நெருங்கிய
மலைகள் ஒப்பனவாகும்; அணை சூழ் நீரொடு நிகர்வன நிறை கடல்-
அணைகளில்   தேங்கிய   நீர்த்தேக்கத்துடன்   நீர்  நிறைந்த   கடல்
ஒப்பதாகும்; நிதிசால் ஊரொடு நிகர்வன இமையவர் உலகம்-செல்வம்
மிக்க அந்த நாட்டு ஊர்களோடு தேவர் உலகு ஒப்பதாகும்.

அந்த     நாட்டுச் சோலைகள் மேகங்களை ஒத்தும். நெற் போர்கள்
மலைகளை   ஒத்தும்.   நீர்த்தேக்கங்கள்  கடலை  ஒத்தும்    ஊர்கள்
எல்லாம்   தேவர்   உலகை   ஒத்தும்  இருந்தன  என்பது    கருத்து.
புணர்மலை: மலைத்தொடர்ச்சி.                               46
 

78.

நெல் மலை அல்லன் - நிரை வரு தரளம்;
சொல் மலை அல்லன் - தொடு கடல் அமிர்தம்;
நல் மலை அல்லன் - நதி தரு நிதியம்;
பொன் மலை அல்லன் - மணி படு புளினம்.