பந்தினை இயையவர் பயில் இடம்- அந்நாட்டு இளம் பெண்கள் பந்து விளையாடும் இடங்கள்; சந்தன வனம் அல சண்பக வனம் ஆம்- சந்தனச் சோலைகளே ஆயினும் அவர்களது மேனி மணத்தால் சண்பகச் சோலைகளாகும்; கந்தனை அனையவர் கலை தெரி கழகம்- முருகனை ஒத்த ஆடவர்கள் வில் முதலிய கலைகளைப் பயிலுமிடங்கள்; நந்தன வனம் அல நறை விரிபுறவம்- பல மலர்களை உடைய நந்தனவனங்களே ஆயினும் ‘அவர்தம்’ மேனி மணத்தால் முல்லைக்காடுகளாக விளங்கும். பெண்களின் மேனி சண்பக மணமும். ஆடவர் மேனி முல்லை மணமும் உடையராதலின் மகளிர் பந்தாடுமிடம் சண்பகச் சோலை ஆயின. ஆடவர் கலை பயிலுமிடம் முல்லைக் காடாக மணந்தன என்பர். “ஆண்கள் மேனிக்கு முல்லை மணம்” இயல் பென்பதை “மன்னொடும் தோளே முல்லை முகை நாறும்மே” என்று குறுந்தொகை (193) வரிகளால் அறியலாம். இளையவர் என்பது இளம் வயதினர் என்ற பொருள் உடையதாயினும் பந்தாடுதல் பாவையர்க்கே உரியதாதலின் ‘இளையவர்’ இளம் பெண்கள் புறவம்: காடு. 48 |