வணிகத்துக்குரிய கப்பல்கள் பெரிய மணிகளையும். பொன்னையும் கொண்டு வந்து குவிப்பனவாம்; ஊதைகள் உறையுறும் அமுதும் சொரிவன- காற்று உயிர்காக்கும் அமுதத் துளிகளைச் சொரிவனவாம்; காதைகள் செவிநுகர் கனிகள் சொரிவன- கவிஞர்களின் காப்பியங்கள் செவிக்கினிய பாடல்களைத் தருவனவாம். மக்கள் அணியும் மலர் மாலைகள் தேனையும். கப்பல்கள். மணி. பொன் ஆகியவைகளையும். காற்று உயிர் காக்கும் அமுதத் திவலைகளையும் காப்பியங்கள் இனிய பாக்களையும் சொரிவனவாம் என்பது கருத்து. பாதைகள்: காலினும் கலத்தினும் உறை: துளி கவியின்பம் செவியால் நுகரப்படுவதாதலின் ‘செவி நுகர் கனி” என்றார். கோதை: பெண்கள் கூந்தல் என்பதால். கூந்தலின் அணிந்த மலர் மாலை தேன் சொரியும் என்றும் பொருள் கூறலாம். சத்துருக்கள் உரையில் மாண்பினை செவிப் புலம் நுகர்வதோர் தெய்வத் தேன்கொலாம் (2266) என்று குறிப்பது இங்கு ஒப்பிடத்தக்கது. 51 |