பக்கம் எண் :

  நகரப் படலம்77

யும்   -     பறவைகளின்  வேந்தனான  கருடனையும்;    இயங்கும்
காலையும்
-  விரைந்து   செல்லும்  காற்றையும்;  இதமல  நினைவார்
மனத்தையும்
-       நன்மை      யல்லாதவைகளை     நினைப்பவர்
மனத்தினையும்;   எறியும்   பொறிஉள   என்றால்-   கொல்லவல்ல
இயந்திரங்களும்   அந்த  மதிலில்  உள்ளன  என்றால்;  மற்ற  இனி
உணர்த்துவது  எவன்
- மதிலின் காவலைப் பற்றி விரித்துரைக்க என்ன
இருக்கிறது.

சினத்து     அயில் வீரர்களது   கோபத்தை படையின் மேலேற்றிக்
கூறினார்.  அயோத்தி  நகரத்தில்   மதில்  பல விதமான பொறிகளைத்
தன்னுள்   கொண்டு.   நல்ல  காவலாயிருப்பதைக்   கூறினார்.  அந்த
மதிலில்  அமைந்துள்ள  போர்க்  கருவிகள்    மிகச் சிறிய உயிரையும்
கொல்லும்     என்பதற்குக்     கொசுவையும்      மிக    உயரத்தில்
செல்லுவனவற்றையும்    அழிக்கும்    என்பதற்குக்      கருடனையும்.
உருவமற்றவைகளையும்   அழிக்கும்  என்பதற்காக    காற்றையும்  மிக
விரைந்து  செல்லும் காண இயலாதனவற்றையும்   துணிக்கும் என்பதற்கு
மனத்தையும்   கூறியுள்ள  நயம்  கருதத்தக்கது.  உலக்கை:    இரும்பு
உலக்கை. தோமரம்: ஈட்டி. கவண்கல்: கவணெறிகல்லாகும்.        12
 

105.‘பூணினும் புகழே அமையும்’ என்று. இனைய
   பொற்பில் நின்று. உயிர் நனி புரக்கும்.
யாணர் எண் திசைக்கும் இருள் அற இமைக்கும்
   இரவிதன் குலமுதல் நிருபர்-
சேணையும் கடந்து. திசையையும் கடந்து.-
   திகிரியும். செந் தனிக் கோலும்.
ஆணையும் காக்கும்; ஆயினும். நகருக்கு
   அணி என இயற்றியது அன்றே.
 

‘பூணினும்     புகழே அமையும்’ என்று- அணிகலன்களை விடப்
புகழே  சிறந்த  அணிகலமாக  அமையும்  என  நினைத்து;   இனைய
பொற்பில் நின்று உயிர் நனி புரக்கும்
- இத்தகைய நல்லொழுக்கத்தில்
நின்று   நாட்டு   மக்களைக்  காப்பவரான;  யாணர்  எண்திசைக்கும்
இருளறு  இமைக்கும்
-  அழகிய  எட்டுத் திசைகளிலும்  உள்ள இருள்
நீங்கும்படி  ஒளிர்கின்ற; இரவிதன் குலமுதல் நிருபர்- சூரிய குலத்தில்
தோன்றிய  அரசர்களின்; திகிரியும்  செந்தனிக்கோலும் ஆணையும்-
ஆணையாகிய  சக்கரமும்  செங்கோலும்    கட்டளையும்;  சேணையும்
கடந்து    திசையையும்   கடந்து    காக்கும்
-   மேலுலகத்தையும்
திசைகளையும்   கடந்து  சென்று  காக்கவல்லது  எனவே;   ஆயினும்
நகருக்கு   அணியென  இயற்றியது   அன்றே
-  ஆனாலும்  அந்த
மாநகருக்கு அழகு செய்ய அமைந்தது அம்மதில் மட்டுமே.

ஆபரணங்கள் தரும் அழகு பெரிதன்றோ; புகழே சிறந்தது’ என்பது
சூரிய  குலத்து அரசர்களின் கருத்து. அவர்களின்   குல முதல்வனாகிய
சூரியனும்  நாளும்  நாளும் புதிய ஒளி வீசி இருள்    தீர்ப்பவன். (ஒளி
என்ற சொல்லுக்குப்