சூழ்ந்த நாஞ்சில் சூழ்ந்த ஆரை- ஆய்ந்து கட்டப்பட்ட நாஞ்சில் முதலிய உறுப்புகளை உடைய நகரைச் சுற்றிலும் உள்ள அந்த மதிலின்; சுற்றும் முற்று பாரெலாம் - சுற்றிலும் நிறைந்திருக்கும் பாறைகளையெல்லாம்; போழ்ந்து மா கிடங்கிடை- பிளந்து அமைக்கப்பட்ட அந்தப் பெரிய அகழியிலே; கிடந்து பொங்கு இடங்கர்மா - தங்கி மேலே எழும் முதலைகள்; தாழ்ந்த வங்க வாரியில் - ஆழமானதும். கப்பல்களை உடையதும் ஆகிய கடலிலே; தடுப்ப ஒணா மதத்தினால் - தடுக்க இயலாத மதத்தினாலே; ஆழ்ந்த யானை மீள் இலாது - உள்ளே அழுந்திய யானை மீள முடியாமல்; அழுந்துகின்ற போலும் - அமிழ்ந்து எழுவன போலக் காணப்பெறும். அகழியிலே முதலைகள் ஆழ்ந்து எழுவதற்கு. கடலிலே யானைகள் ஆழ்ந்து எழுவதை உவமை கூறினார். கருமை. வலிமை. பருமை இவைகளால் முதலைக்கு யானை பண்புவமை. நாஞ்சில்: ஏப்புழை என்னும் மதிலின் உறுப்பு. முற்றும்: நிறைந்திருக்கும் பார்: பாசறை “பாருடைத்த குண்டகழி” என்பது புறநானூறு. 14.மா: பொதுவாக விலங்குகளைக் குறிக்கும் இச்சொல். நீரில் வாழும் உயிர்களையும் பறவைகளையும் குறிப்பதுண்டு. 17 |