பக்கம் எண் :

  நகரப் படலம்83

அன்ன     நீள் அகன் கிடங்கு  -  அத்தகைய  நீண்ட.  பரந்த
அகழியை; சூழ்கிடந்த ஆழியை- சுற்றிக் கிடந்த சக்கரவாள மலையை;
துன்னி    வேறு   சூழ்  கிடந்த
-   நெருங்கி   வேறாகச்   சூழ்ந்து
கொண்டிருக்கும்;    தூங்கு    வீங்கு   இருட்பிழம்பு-   அசையாது.
மிகுந்திருக்கும்  இருள்  கூட்டமோ;  என்னலாம்  இறும்பு  -  என்று
சொல்லத்தக்க   காடு போன்று;  சூழ்கிடந்த  சோலை  எண்ணில்  -
சூழ்ந்திருக்கும்   சோலையை   நினைத்தால்;   அப்பொன்னின்  மா
மதிட்கு
-  அந்த  அழகிய  மதிலுக்கு;  உடுத்த நீல ஆடை போலும்-
உடுத்திய நீல ஆடையைப் போலத் தோன்றும்.

நகரைச்       சுற்றியிருக்கும்   மதில் சக்கரவாள மலை; அதனைச்
சுற்றியிருக்கும்  அகழி.  பெரும்  புறக்கடல்- அகழியைச் சூழ்ந்திருக்கும்
காவற்   காடு.   மிகுந்து  பரவிய  இருள்   கூட்டம்.  இது  தன்மைத்
தற்குறிப்பேற்றவணி.  காடு  பொன்  மதிலுக்கு    உடுத்திய நீல ஆடை
போலக்  காணப்பட்டது  என்பதும்  தற்குறிப்பேற்றம்.   கிடங்கு: அகழி.
இறும்பு: செயற்கைக் காடு. இதனை ‘மிளை’ என்னும்   காவற்காடென்பர்.
நீல  ஆடை  கண்ணெச்சில் (கண்ணேறு) படாமைக்குச்   சுட்டப்பட்டது
என்ப.                                                  21
 
                                                வாயில் காடு
 

114.எல்லை நின்ற வென்றி யானை என்ன
   நின்ற; முன்னம் மால்.
ஒல்லை. உம்பர் நாடு அளந்த
   தாளின் மீது உயர்ந்தவால்-
மல்லல் ஞாலம் யாவும்
   நீதி மாறுறா வழக்கினால்
நல்ல ஆறு சொல்லும் வேதம் நான்கும்
   அன்ன- வாயிலே.
 

வாயில்     - அயோத்தி நகரத்துக் கோபுர வாயில்கள்   (நான்கும்);
எல்லை  நின்ற வென்றியானை  என்ன நின்று
- நான்கு திசைகளிலும்
நிற்கும்  திக்கு  யானைகள்  என்னும்படி  நின்றன (அன்றியும்);   மால்
முன்னம்   ஒல்லை உம்பர்   நாடு   அளந்த  தாளின்
-  திருமால்
வாமனனாகவந்து   விரைவாக   திருவிக்கிரமனாகி     விண்ணுலகத்தை
அளந்த  திருவடியைவிட;  மீது  உயர்ந்தவால்-  மேலும்  வாயில்கள்
உயர்ந்து   நின்றன;  மல்லல்   ஞாலம்   யாவும்-  வளம்  நிறைந்த
உலகத்தவரெல்லாம்;  நீதி மாறுறா வழக்கினால்- நீதி தவறாது நடக்கச்
செய்வதால்; நல்ல ஆறு சொல்லும்- நல்ல நெறிகளைக் கூறும்; வேதம்
நான்கும் அன்ன
- நான்மறைகளையும் ஒத்திருந்தன.

திக்கு     யானைகள் தமக்குரிய எல்லையில் நிலைபெயராது நிற்பது
போல   நகரின்  நான்கு  திசைகளிலும்  உள்ள   கோபுர  வாயில்கள்
காணப்பட்டன.