பக்கம் எண் :

84பால காண்டம்  

அவற்றின்         உயரத்தைக்    குறிப்பிட.  விண்ணுலகை  அளந்த
திருமாலின்   திருவடிகளை   விடவும்     உயர்ந்திருந்தன   என்றார்.
செங்கோலின்  சிறப்பால்  நீதி  தவறாது    காத்தலின். நன்னெறி கூறும்
நான்மறை போன்றது என்றார்.

மல்லல்: வளம். நல்ல ஆறு: நல்ல நெறி. ஆல்: அசை.        22
 

115.தா இல் பொன் - தலத்தின். நல்
   தவத்தினோர்கள் தங்கு தாள்
பூ உயர்த்த கற்பகப் பொதும்பர்
   புக்கு ஒதுங்குமால்-
ஆவி ஒத்த அன்பு சேவல்
   கூவ வந்து அணைந்திடா
ஓவியப் புறாவின் மாடு
   இருக்க ஊடு பேடையே.
 

ஆவி     ஒத்து சேவல் கூவ- தனது உயிருக் கொப்பான  ஆண்
புறாவானது  கூவி  அழைக்கவும்;  அன்பின்  வந்து அணைந்திடாது-
அன்புடன்  வந்து  தழுவிக்  கொள்ளாமல்;  ஓவியப்  புறாவின் மாடு
இருக்க
-  அந்த வாயிலின் புறத்தே சித்திரத்தில் அமைந்துள்ள   பெண்
புறாவின்   பக்கம்   (ஆண்  புறாஉடன்);  இருந்ததால்  ஊடுபேடை-
ஊடல்கொண்ட  பெண்புறா;  தாஇல் பொன்தலத்தில்- குற்றமற்ற தேவ
உலகிலே;  நல்தவத்தினோர்கள் தங்கு-  நல்ல  தவம்  செய்தவர்கள்
தங்கியுள்ள;   தாள்   பூவுயிர்த்த-   தாளை   உடையதும்  மலர்கள்
பூத்திருப்பதுமான; கற்பகப்  பொதும்பர்  புக்கு ஒதுங்குமால்- கற்பகச்
சோலையிலே சென்று மறைந்திருக்கும்.

கோபுர     வாயிலில் வாடும்  ஆண்புறா. ஓவியப் புறாவை உண்மை
என  நினைத்து  அதன்  அருகிருக்கும்  அதனைக்     கண்டு  ஊடிய
பெண்புறா    விண்ணுலகத்தின்    கற்பகச்   சோலையிலே     புகுந்து
மறைந்திருக்கும்.  இது  மயக்கவணி. கற்பகம்: நினைத்ததைத்    தருவது.
சந்தானம். மந்தாரம். பாரிசாதம். கற்பகம். அரிசந்தனம் என்ற    ஐவகை
மரங்கள்  நிறைந்திருப்பது இச்சோலை என்பர். தாவில்:   குற்றமில்லாத.
தாள்: அடி நாளமும் ஆம்.                                   23
 
                                            எழுநிலை மாடம்
 

116.கல் அடித்து அடுக்கி. வாய் பளிங்கு
   அரிந்து கட்டி. மீது
எல்லுடைப் பசும் பொன் வைத்து.
   இலங்கு பல் மணிக் குலம்
வில்லிடக் குயிற்றி. வாள்
   விரிக்கும் வெள்ளி மா மரம்
புல்லிடக் கிடத்தி. வச்சிரத்த
   கால் பொருந்தியே.