பக்கம் எண் :

  நகரப் படலம்85

கல்     அடித்து    அடுக்கி- மணிக்கற்களைச் செதுக்கி அடுக்கிச்
சுவரெழுப்பி; வாய்ப்பளிங்கு  அரிந்து  கட்டி-  முன்புறம்  பளிங்குக்
கற்களை  அறுத்துக் கட்டி;  மீது  எல்லுடை  பசும் பொன் வைத்து-
அதன்மேலே  ஒளிவீசும்  பொன்தகடு  வேய்ந்து;  இலங்கு பன்மணிக்
குலம்   வில்லிடக்  குயிற்றி
-   விளங்குகின்ற  பலவகை  மணிகளை
ஒளிவீசும்படி  (பொன்தகட்டில்)  பதித்து;  வாள்  விரிக்கும்  வெள்ளி
மாமரம்  புல்லிடக் கிடத்தி
- ஒளியை பரப்புகின்ற வெள்ளியால் ஆன
விட்டத்தை  அதன்  மீது  பொருந்துமாறு  வைத்து;  வச்சிரத்த கால்
பொருத்தி
- வைரத் தூண்களை அதன்மேலே நாட்டி.

இது     முதல் மூன்று பாடல்கள் குளகம்.     “குளகம் பல பாட்டு
ஒருவினை  கொள்ளும்”  என்றபடி  மௌலி   சூட்டி அன்னவே என்ற
மூன்றாம் பாட்டில் பொருள்முற்றுப் பெரும்.

கல்:     மணிக்கல்.    அதனைச்   செம்மையுறச்  செதுக்கிச்  சுவர்
எழுப்பப்பட்டுள்ளது.  அதற்கு முன்புறம்    பளிங்குக் கற்களை அளவுற
அறுத்துக்கட்டி அதன் மேலே பென்தகடு   வேய்ந்து அந்தத் தகட்டிலே
பலவகை    மணிகளைப்   பதித்து-      வெள்ளக்   கை   மரத்தைப்
பொருததும்படி - வைத்து வைரத்தூண் நிறுத்தி என்பது கருத்து.   24
 

117.மரகதத்து இலங்கு போதிகைத்
   தலத்து வச்சிரம்
புரை தபுத்து அடுக்கி. மீது பொன் குயிற்றி.
   மின் குலாம்
நிரை மணிக் குலத்தின் ஆளி நீள்
   வகுத்த ஒளிமேல்
விரவு கைத்தலத்தின் உய்த்த
   மேதகத்தின் மீதுஅரோ

 

மரகதத்து     இலங்கு போதிகைத் தலத்து- மரகதத்தால் செய்த
விளங்கு  போதிகைக்  கட்டைகளின்;  வச்சிரம் புரைதபுத்து அடுக்கி-
வைரக்  கற்களைக் குற்றமகற்றி அடுக்கி வைத்த; மீது பொன் குயிற்றி-
மேலே  பொன்தகட்டை  வைத்து; மின்குலாம் நிரைமணிக் குலத்தின்
வகுத்த
-   மின்னல்     போல   விளங்கும்  வரிசையான  இரத்தினத்
தொகுதியால்  ஆகிய;  நீள் ஆளி ஒளி மேல்- நீண்ட சிங்க உருவின்
வரிசை  மீது;  விரவு கைத்தலத்தின்  உய்த்த-  ஒழுங்கு பொருந்திய
கைமரமாக வைக்கப்பட்ட; மேகத்தின் மீது- கோமேதத்தின்மேலே

முன்பாட்டில்     கூறிய  வைரத்தூண்களின்   மீது மரகதத்தாலான
போதிகைகளை  அமைத்து  வச்சிரக்   கற்களை  வரிசையாக அடுக்கிப்
பதித்து- அதன் மேலே பலவகை   மணிகளைப்  பதித்துச் செய்யப்பட்ட
சிங்க  வடிவங்களை  அழகுக்காக    வைத்து அதன் மேல் கோமேதகக்
கைகளை அமைத்துத் தளப்படுத்தி என்பது கருத்து.