பக்கம் எண் :

  நகரப் படலம்89

தூய்மை உடையனவும்; ஆடகத்  தோற்றத்து - பொன்னைப்  போன்ற
தோற்றமுடையனவும்;    அளவு   இலாதன-   ஆகிய   மாளிகைகள்
அளவற்றனவாம்.

நாடு     அகத்  தொழிலின:  கருதிச்  செய்யப்படும் தொழில் திறம்
உடையன   என்றும்   பொருந்தும்.     இப்பாடல்  விலைமகளிரையும்
குறிக்கும்    வகையில் சிலேடையாக அமைந்துள்ளது. பாடகம் அணிந்த
மகளிரின்  பாதங்கள்  தாமரை  மலரை ஒப்பன; இளையரை   (சேடர்).
அணைத்  திருப்பவர்;  சிவந்த  வாய்  உடையவர்;  நடனத்   தொழில்
அறிந்தவர்;  இடுப்பு  (நடுவு); பஞ்சின் (தூய்) நுனியை ஒத்தது-   என்று
தக்கவாறு பொருள்கொள்ள வேண்டும்.

   பாடகம்- கால் அணி; பாடு அகம்- வேலைப்பாடு மிகுந்த.

ஒப்பன.   தழீஇயின.   வாயின.  தொழிலின்.  துய்யன.  தோற்றத்த-
முற்றெச்செங்கள்.

    தழீஇ- தழுவி (சொல்லிசை அளபெடை).                    31
 

124.புக்கவர் கண் இணை பொருந்துறாது. ஒளி
தொக்குடன் தயங்கி. விண்ணவரின் தோன்றலால்.
திக்குற நிலைப்பினில் செல்லும் தெய்வ வீடு
ஒக்க நின்று இமைப்பன. உம்பர் நாட்டினும்.
 

புக்கவர் -     பார்க்கப்   (புகுந்தவர்) வந்தவர்; கண் இமை- கண்
இமைகள்;  பொருந்துறாது- வியப்பின் மிகுதியால். மலர்ந்து விளங்குமே
அல்லாது   ஒன்றுடன்  ஒன்று  சேரா  (கண்  கொட்டாமல் பார்த்தனர்
என்பது    கருத்து);  ஒளி-  மாளிகைகளில்  பதித்த  இரத்தினங்களின்;
பூசிய வெண்சாந்தின்  ஒளி;   தொக்கு  உடன் தயங்கி  - பார்ப்பவர்
உடலின்மீது   பாய்வதால்  (எதிரொளி)  அவர்கள்  விளகம்    பெற்று;
விண்ணவரின்
-     தேவர்களைப்     போல;       தோன்றலால்-
காட்சியளிப்பதாலும்;   திக்குற-   எல்லாத்  திசைகளிலும்;  செல்லும்-
செல்ல வல்ல; தெய்வ வீடு- தெய்வீக விமானம்; ஒக்க- போல; நின்று-
நிலத்தல் பதிந்து கிடக்கும்; உம்பர் நாட்டின்- அம்மாளிகைகளின் ஒளி
வெள்ளம் தேவர் உலகத்தும்; இமைப்பன- சென்று ஒளி வீசுவன.

எப்போதும்      ஒளி  உமிழ்வதும் இயங்கும் இயல்பினவுமாய தேவ
விமானங்கள்   மண்ணகத்துத்    தங்கிய    போல்   அம்மாளிகைகள்
விளங்கின.  அவற்றின்   ஒளி  காண்பார் உடல்களில் பதிவதாலும் கண்
இமையாது  இருத்தலாலும்  அவர்களும்  தேவராயினர் என்பது கருத்து.
                                                       32
 

125.அணி இழை மகளிரும். அலங்கல் வீரரும்.
தணிவன அறநெறி. தணிவு இலாதன
மணியினும் பொன்னினும் வனைந்த அல்லது
பணி பிறிது இயன்றில; பகலை வென்றன.