பக்கம் எண் :

90பால காண்டம்  

அணி     இழை மகளிரும்  - அழகிய அணிகலன்களை அணிந்த
பெண்களும்;   அலங்கல்   வீரரும்-   மாலையணிந்த  மார்பினரான
வீரர்களும்;  துணிவன  அறநெறி-  அற  நெறியினையே  துணிவுடன்
பற்றுவர்;   மணியினும்  பொன்னினும்   வனைந்து-  மணிகளாலும்.
பொன்னாலும்   புனையப்பட்டுள்ள  மாளிகைகள்;  தணிவு  இலாதன-
என்றும்  அறநெறிகளில்  குறையாது  நிறைந்திருப்பவை;  பிறிது பணி
இயன்றில
-   வேறுகல். மண் முதலியவைகளால் அவை கட்டப்பட்டவை
அல்ல;  பகலை  வென்றன-  தம்  ஒளியால்  சூரியனையும்  வென்று
விளங்குபவை.

மாளிகைகள்     என்ற   எழுவாய். தொடர்ச்சி நோக்கி வரவழைத்து
உரைக்கப்பட்டது.    பொன்னாலும்.  மணியாலும்  இயன்றன  ஆதலால்
அம்மாளிகைகள்  சூரியனைவிட    ஒளிபொருந்தியனவாக ஒளிர்கின்றன
என்கிறார்.    மாளிகைகளில்      வாழும்    மகளிரும்    ஆடவரும்
அறநெறியிலேயே    நிற்பவர்;  ஆதலின்    அவர்     மாளிகைகளும்
அறநெறியில்  தணிவு  இலாதன  ஆயின.    புறவொளியால் கதிரவனை
வென்றவை  மாளிகைகள்;   ஆயினும்  அகவொளியாகிய அறநெறியால்
சிறந்தவை. ஆக. பெருமைக்கு உரியது என்பது கவிஞர் குறிப்பு.     33
 
 

126.வானுற நிவந்தன; வரம்பு இல் செல்வத்த;
தான் உயர் புகழ் எனத் தயங்கு சோதிய;
ஊனம் இல் அறநெறி உற்ற எண் இலாக்
கோன் நிகர் குடிகள்தம் கொள்கை சான்றன.

 

வான்    உறு நிவந்தன - (அந்நகரத்து மாளிகைகள்) வானமளவும்
உயரந்து  இருப்பவை;   வரம்பு இல்செல்வத்த- அளவற்ற செல்வத்தை
உடையன;   தான்  உயர்  புகழ்என-  எங்கும்  பரவியுயர்ந்த  புகழ்
என்னும்படி;  தயங்குசோதிய- விளங்கும் ஒளி உடையன; ஊனம் இல்
அற  நெறிஉற்ற  
-  குற்ற மற்ற அரநெறியைக் கடைப்பிடித்து வாழும்;
கோன்நிகர்
-  அரசைனைப்  போன்று வாழும்; எண்இலாக் குடிகள்தம்
கொள்கை சான்றன
-  எண்ணிக்கை இல்லாத குடிமக்களது தன்மைக்குச்
சான்றாக உள்ளனவாம்.

அந்நகரத்து      மக்கள் ஒழுக்கத்தில் சிறந்து- அற நெறியில் நின்று
அரசர்களைப்    போல  வசதியுடன்  வாழ்வதற்கு  அவர்கள்  வாழும்
இம்மாளிகைகளே சான்றாக விளங்குகின்றன என்பதாம்.

“கோன்      நிகர்க்குடிகள்”  அரசரைப் போல வாழும் குடிமக்கள்.
சான்றன   சான்றாக  உள்ளன    புகழ்  எனத்தயங்கு  சோதிய  புகழ்
பரந்திருப்பது போல ஒளி எங்கும்   பரந்திருக்கும் மாளிகைகள் என்பது
கருத்து. கொள்கை-தன்மை.                                  34
 

127.அருவியின் தாழ்ந்து. முத்து அலங்கு தாமத்த;
விரி முகிற்குலம் எனக் கொடி விராயின;
பரு மணிக் குவையன; பசும் பொன் கோடிய;
பொரு மயில் கணத்தன;- மலையும் போன்றன.