பக்கம் எண் :

92பால காண்டம்  

துடி  இணைப் பணை முலை - உடுக்கை போன்ற இடையினையும்
பருத்த  தனங்களையும் உடைய; தோகை அன்னவர்- மயில்   போன்ற
சாயலை  உடைய மகளிர்; அடியிணைச் சிலம்பு பூண்டு- தங்கள்  இரு
கால்களிலும்   சிலம்பு   அணிந்து;   அரற்றும்   மாளிகை-  அவை
ஒலிக்கும்படி   நடக்கும்   மாளிகைகளிலே;  கொடியிடைத்தரளவெண்
கோவை சூழ்வன
- கொடிகளுக்கு இடையில் முத்து மாலைகள்  தொங்க
விடப்பட்டுள்ளவை;  கழி  உடை   கற்பகம்   கான்ற   மாலையே-
மணம்மிக்க கற்பக மரங்களில் பூத்த மாலைகளை ஒத்திருந்தன.

மாளிகையின்     கொடிகளிலே தொங்கவிடப்பட்ட  முத்துமாலைகள்.
கற்பக   மரத்தில்   உள்ள   பூமாலைகளை  ஒக்கும்  என்றார்.   இது
காட்சியணி.   இனி  “கொடியிடைத்  தரள  வெண்  கோவை   (அந்த
மாளிகைளின்   உயர   மிகுதியில்)  கற்பக  மரத்தின்    மாலைகளைச்
சூழ்வன”  என்பது  பொருந்தும்.  கடியுடைக்  கற்பகம்    என்பதற்குக்
கற்பகச் சோலை எனவும் பொருள் கொள்ளலாம்.                37
 

130.

காண் வரு நெடு வரைக் கதலிக் கானம்போல்.
தாள் நிமிர் பதாகையின் குழாம் தழைத்தன;
வாள் நனி மழுங்கிட மடங்கி. வைகலும்
சேண் மதி தேய்வது. அக் கொடிகள் தேய்க்கவே.
 

நெடுவரை    காண்வரு- பெரிய மலைகளில் காணப்படும்; கதலிக்
கானம்  போல்
-  வாழை மரங்களை உடைய தோப்பைப் போல; தாள்
நிமிர்   பதாகையின்   குழாம் தழைத்தன
-  கொடிமரங்கள்  நீண்ட
கொடிகளின்  தொகுதி  மிகுந்துள்ளன;; சேண்மதி வாள்நனி மழுங்கிட
மடங்கி
-  
வானத்திலுள்ள  சந்திரன்  தன் ஒளிமிக மழுங்கி  வளைந்து;
வைகலும் தேய்வது
-  நாள்தோறும்  தேய்ந்து போவது; அக்கொடிகள்
தேய்க்கவே
- அந்த கொடிகள் உராய்வதன் காரணமாகத் தான்.

நகரத்துக்     கொடிகள் பெரிய  மலைகளில்   காணப்படும் வாழை
தோப்பை  போலக்  காணப்படும்;  வானத்தில்    உள்ள சந்திரன் ஒளி
குறைந்து    வளைந்து    நாள்தோறும்      தேய்ந்து   காணப்படுவது
அக்கொடிகள்  சந்திரனுன் மீது   உராய்வதனாலேயே என்றார். சந்திரன்
தேய்பிறையில்   தேய்வதற்குக்   காரணம்   கற்பித்துக்  கூறியதால் இது
ஏதுத் தற்குறிப்பேற்ற அணி.                                38
 
 
  மாட மாளிகைகளின் ஒளியும் மணமும்
  

131.பொன் திணி மண்டபம் அல்ல. பூத்தொடர்
மன்றுகள்; அல்லன மாட மாளிகை;
குன்றுகள் அல்லன மணி செய் குட்டிமம்;
முன்றில்கள் அல்லன முத்தின் பந்தரே.

 

பொன்திணி மண்டபம் அல்ல-  பொன்னால்  கட்டிய  மண்டபம்
அல்லாதவை; பூத்    தொடர்- மலர்களால் அமைந்த மண்டபங்களாம்;