பொன் நெடும் குன்றம் அன்னான் - நீண்டு. உயர்ந்த பொன் மலையாகிய மேருமலையைப் போன்ற சலியாத் தன்மை வாய்ந்த இராமபிரானது; புகர்முகப் பகழி என்னும் - முன்புறம் புள்ளிகளையுடைய அம்பு என்ற; அ நெடும் கால வன் காற்று - நெடிய. கடையூழிக் காலத்து வலியகாற்று; அடித்தலும் - அடித்த உடனே; இடித்து வானில் கல்நெடுமாரி பெய்ய - வானத்தே இடி முழக்கம் செய்து கல்மழை பெய்வதற்காக; கடையுகத்து எழுந்த மேகம் - யுகத்தின் கடைசியில் எழுந்த மேகமானது; மின் ஓடும் அசனியோடும் - மின்னலோடும். இடியோடும் வீழ்வதே போல வீழ்ந்தாள்- வீழ்வது போல. தாடகை வீழ்ந்தாள். கரிய நிறத்தினனான ராமனைப் ‘பொன் நெடுங்குன்றம்’ என்றது நிறம் கருதியன்று. சலியாத்தன்மை கருதியே யாகும். புகர்: புள்ளி. முகம்: முன்புறம் பகழி: அம்பு. கடையுகம்: யுகக்கடை. சொல்மாற்று. மேகம்: புயல். தாடகைக்கு மேகம் உவமை. அவளது கூந்தலும் குரலும் மின்னலும் இடியும் போன்றவை என்க. இராமபிரானது அம்பாகிய கால வன் காற்று அடித்ததும். இடி. மின்னலோடு கூடிய ஊழிக் காலத்து மேகம் வீழ்வது போல. தாடகை வீழ்ந்தாள் என்க 51 |