"கதிரவனது
சொல்லைக் கேட்ட கண்ணகி, எஞ்சிய ஒற்றைச் சிலம்பை ஏந்தி நகரினுள் புக்கு, நகர
மாந்தரை நோக்கி முறையிட்டு, அழுதல"
5
10
பெண் அணி
கோலம் பெயர்ந்த பிற்பாடு,
புண்ணிய முதல்வி திருந்து அடி பொருந்தி,
‘கடுங் கதிர் வேனில் இக் காரிகை பொறாஅள்;
படிந்தில சீறடி பரல் வெங் கானத்து;
“கோள் வல் உளியமும் கொடும் புற்று அகழா;
வாள் வரி வேங்கையும் மான் கணம் மறலா;
அரவும், சூரும், இரை தேர் முதலையும்,
உருமும், சார்ந்தவர்க்கு உறுகண் செய்யா-
செங்கோல் தென்னவர் காக்கும் நாடு” என,
எங்கணும் போகிய இசையோ பெரிதே;
பகல் ஒளி-தன்னினும், பல் உயிர் ஓம்பும்
*நிலவு ஒளி விளக்கின், நீள் இடை மருங்கின்,
இரவிடைக் கழிதற்கு ஏதம் இல்’ என-
குரவரும் நேர்ந்த கொள்கையின் அமர்ந்து,
கொடுங்கோல் வேந்தன்
குடிகள் போல,
படும் கதிர் அமையம் பார்த்திருந்தோர்க்கு-
‘பல் மீன் தானையொடு பால் கதிர் பரப்பி,
தென்னவன் குலமுதல் செல்வன் தோன்றி,
தாரகைக் கோவையும் சந்தின் குழம்பும
சீர் இள வன முலை சேராது ஒழியவும்,
தாது சேர் கழுநீர்த் தண் பூம் பிணையல்
போது சேர் பூங் குழல் பொருந்தாது ஒழியவும்,
பைந் தளிர் ஆரமொடு பல் பூங் குறு முறி
செந்தளிர் மேனி சேராது ஒழியவும்
மலயத்து ஓங்கி மதுரையின் வளர்ந்து
புலவர் நாவில் பொருந்திய தென்றலொடு
பால் நிலா வெண் கதிர் பாவைமேல் சொரிய,
வேனில் திங்களும் வேண்டுதி’ என்றெ
பார்மகள் அயா உயிர்த்து, அடங்கிய பின்னர்-
"
அடிகளின்
அறவுரையைக் கேட்டுக்
கோவலன் வழிநடத்தல்
"
30
35
ஆர் இடை உழந்த மாதரை நோக்கி
‘கொடுவரி மறுகும்; குடிஞை கூப்பிடும்;
இடிதரும் உளியமும்; இனையாது ஏகு’ என,
தொடி வளைச் செங்
கை தோளில் காட்டி,
மறவுரை நீத்த மாசு அறு கேள்வி
அறவுரை கேட்டு, ஆங்கு, ஆர் இடை கழிந்து-
வேனல் வீற்றிருந்த வேய் கரி கானத்து,
கான வாரணம் கதிர் வரவு இயம்ப,
வரிநவில் கொள்கை மறைநூல் வழுக்கத்துப்
புரிநூல் மார்பர் உறை பதிச் சேர்ந்து-
கோசிக மாணி கொள்கையின் உரைப்போன்:
இரு நிதிக் கிழவனும் பெரு மனைக் கிழத்தியும்
அரு மணி இழந்த நாகம் போன்றதும்;
இன் உயிர் இழந்த யாக்கை என்ன,
துன்னிய சுற்றம் துயர்க் கடல் வீழ்ந்ததும்;
‘ஏவலாளர்! யாங்கணும் சென்று,
கோவலன் தேடிக் கொணர்க’ எனப் பெயர்ந்ததும்;
‘பெருமகன் ஏவல் அல்லது, யாங்கணும்,
அரசே தஞ்சம்’ என்று. அரும் கான் அடைந்த
அருந்திறல் பிரிந்த அயோத்தி போல,
பெரும் பெயர் மூதூர் பெரும் பேது உற்றதும்;
வசந்தமாலைவாய் மாதவி கேட்டு,
பசந்த மேனியள், படர் நோய் உற்று,
நெடு நிலை மாடத்து இடை நிலத்து-ஆங்கு, ஓர்
படை அமை சேக்கைப் பள்ளியுள் வீழ்ந்ததும்;
வீழ் துயர் உற்றோள் விழுமம் கேட்டு,
தாழ் துயர் எய்தி, தான் சென்று இருந்ததும்;
இருந் துயர் உற்றோள், ‘இணை அடி தொழுதேன்;
வரும் துயர் நீக்கு’ என, மலர்க் கையின் எழுதி.
‘கண் மணி அனையாற்குக் காட்டுக’ என்றே,
மண் உடை முடங்கல் மாதவி ஈத்ததும்;
ஈத்த ஓலை கொண்டு, இடைநெறித் திரிந்து;
தீத்திறம் புரிந்தோன் சென்ற தேயமும்;
வழி மருங்கு இருந்து மாசு அற உரைத்து-
"மாதவியின் முடங்கலைப் பார்த்துக் கோவலன்
உண்மை உணர்தல் ஆங்கு,
"
80
85
90
95
அழிவு உடை
உள்ளத்து ஆர் அஞர் ஆட்டி,
போது அவிழ் புரி குழல் பூங் கொடி நங்கை,
மாதவி ஓலை மலர்க் கையின் நீட்ட,
உடன் உறை காலத்து உரைத்த நெய் வாசம்
குறு நெறிக் கூந்தல் மண் பொறி உணர்த்திக்
காட்டியது; ஆதலின் கை விடலீயான்,
ஏட்டுஅகம் விரித்து, ஆங்கு எய்தியது உணர்வோன்,
‘அடிகள் முன்னர் யான் அடி வீழ்ந்தேன்;
வடியாக் கிளவி மனக்கொளல் வேண்டும்;
குரவர் பணி அன்றியும், குலப்பிறப்புஆட்டியோடு
இரவிடைக் கழிதற்கு, என் பிழைப்பு அறியாது,
கையறு நெஞ்சம் கடியல் வேண்டும்;
பொய் தீர் காட்சிப் புரையோய், போற்றி!’
என்று அவள் எழுதிய இசைமொழி உணர்ந்து,
‘தன் தீது இலள்’ என, தளர்ச்சி நீங்கி,
‘என் தீது’ என்றே எய்தியது உணர்ந்து-ஆங்கு-
"மாதவியின்
திருமுகத்தைத் தன் தந்தைக்குக் கோவலன் அனுப்புதல
"
100
‘என் பயந்தோற்கு இம் மண் உடை முடங்கல்,
பொற்பு உடைத்தாக, பொருள் உரை பொருந்தியது;
மாசு இல் குரவர் மலர் அடி தொழுதேன்;
கோசிக மாணி! காட்டு’ எனக் கொடுத்து,
‘நடுக்கம் களைந்து, அவர் நல் அகம் பொருந்திய
இடுக்கண் களைதற்கு ஈண்டு’ எனப் போக்கி-
"
கோவலன்
மீண்டு வந்து, பாணர்களுடன் இசை பாடிப் பொழுது போக்குதல்
"
105
110
மாசு இல் கற்பின் மனைவியொடு இருந்த
ஆசு இல் கொள்கை அறவிபால் அணைந்து, ஆங்கு,
ஆடு இயல் கொள்கை அந்தரி கோலம்
பாடும் பாணரில் பாங்குறச் சேர்ந்து,
செந்திறம் புரிந்த செங்கோட்டு-யாழில்,
தந்திரிகரத்தொடு திவவு உறுத்து யாஅத்து,
ஒற்று உறுப்பு உடைமையின் பற்றுவழிச் சேர்த்தி
உழை முதல் கைக்கிளை இறுவாய்க் கட்டி,
வரன்முறை வந்த மூ-வகைத் தானத்து,
பாய் கலைப் பாவை பாடல்-பாணி
ஆசான் திறத்தின் அமைவரக் கேட்டு,
பாடல்-பாணி அளைஇ, அவரொடு-
முன் நாள் முறைமையின்,
இருந் தவ முதல்வியொடு
பின்னையும் அல்லிடைப் பெயர்ந்தனர்-
"
வைகறைப்போதில்
மதுரையின் பேரொலி கேட்டு வருத்தம் நீங்குதல் பெயர்ந்து, ஆங்கு,
"
140
145
150
அரும் தெறல்
கடவுள் அகன் பெரும் கோயிலும்,
பெரும் பெயர் மன்னவன் பேர் இசைக் கோயிலும்,
பால் கெழு சிறப்பின் பல் இயம் சிறந்த
காலை முரசக் கனை குரல் ஓதையும்;
நான்மறை அந்தணர் நவின்ற ஓதையும்;
மாதவர் ஓதி மலிந்த
ஓதையும்;
மீளா வென்றி வேந்தன்
சிறப்பொடு
வாளோர் எடுத்த நாள் அணி முழவமும்;
போரில் கொண்ட
பொரு கரி முழக்கமும்
வாரிக் கொண்ட வயக் கரி முழக்கமும்;
பணை நிலைப் புரவி ஆலும் ஓதையும்;
கிணைநிலைப் பொருநர் வைகறைப் பாணியும்;
;கார்க் கடல் ஒலியின், கலி கெழு கூடல்
ஆர்ப்பு ஒலி எதிர்கொள, ஆர் அஞர் நீங்கி-
குரவமும், வகுளமும், கோங்கமும், வேங்கையும்,
மரவமும், நாகமும், திலகமும், மருதமும்,
சேடலும், செருந்தியும், செண்பக ஓங்கலும்,
பாடலம்-தன்னொடு பல் மலர் விரிந்து;
குருகும், தளவமும், கொழுங்கொடி முசுண்டையும்,
விரி மலர் அதிரலும், வெண் கூதாளமும்,
குடசமும், வெதிரமும், கொழுங் கொடிப் பகன்றையும்,
பிடவமும், மயிலையும், பிணங்கு அரில் மணந்த
கொடுங் கரை மேகலைக் கோவை யாங்கணும்
மிடைந்து, சூழ்போகியஅகன்று ஏந்து அல்குல்:
வாலுகம் குவைஇய மலர்ப் பூந் துருத்தி,
பால்புடைக் கொண்டு, பல் மலர் ஓங்கி,
எதிர் எதிர் விளங்கிய கதிர் இள வன முலை:
கரைநின்று உதிர்த்த கவிர் இதழ்ச் செவ் வாய்:
அருவி முல்லை அணி நகைஆட்டி-
விலங்கு நிமிர்ந்து ஒழுகிய கருங் கயல் நெடுங் கண்:
விரை மலர் நீங்கா அவிர் அறல் கூந்தல்;
உலகு புரந்து ஊட்டும் உயர் பேர் ஒழுக்கத்துப்
புலவர் நாவில் பொருந்திய பூங்கொடி-
வையை என்ற பொய்யாக் குலக்கொடி-
தையற்கு உறுவது தான் அறிந்தனள் போல்,
புண்ணிய நறு மலர் ஆடை போர்த்து,
கண் நிறை நெடு நீர் கரந்தனள், அடக்கி-
‘வானவர் உறையும் மதுரை வலம் கொளத்
தான் நனி பெரிதும் தகவு உடைத்து’ என்று, ஆங்கு,
அரு மிளை உடுத்த அகழி சூழ்போகி;
கரு நெடுங் குவளையும், ஆம்பலும், கமலமும்,
தையலும் கணவனும் தனித்து உறு துயரம்
ஐயம் இன்றி அறிந்தன போல,
பண் நீர் வண்டு பரிந்து இனைந்து ஏங்கி,
கண்ணீர் கொண்டு கால் உற நடுங்க;
போர் உழந்து எடுத்த ஆர் எயில் நெடுங் கொடி,
‘வாரல்’ என்பன போல், மறித்துக் கை காட்ட;
புள் அணி கழனியும் பொழிலும் பொருந்தி,
வெள்ள நீர்ப் பண்ணையும், விரி நீர் ஏரியும்,
காய்க் குலைத் தெங்கும், வாழையும், கமுகும்,
வேய்த் திரள் பந்தரும், விளங்கிய இருக்கை;
அறம் புரி மாந்தர் அன்றிச் சேராப்
புறஞ்சிறை மூதூர்; புக்கனர் புரிந்து-என்,