Cilipidikaram-Padipurai
மதுரைக் காண்டம்

6. கொலைக்களக் காதை


"மாதரி கண்ணகியைத் தக்கதோர் இல்லத்தில் சேர்த்து, அவளுக்கு வேண்டும் பணி செய்வதற்கு, ஏற்றவர்களை நியமித்தல்"





5




10




15




20
அரும் பெறல் பாவையை அடைக்கலம் பெற்ற
இரும் பேர் உவகையின் இடைக் குல மடந்தை
அளை விலை உணவின் ஆய்ச்சியர்-தம்மொடு
மிளை சூழ் கோவலர் இருக்கை அன்றி,
பூவல் ஊட்டிய புனை மாண் பந்தர்க்
காவல் சிற்றில் கடி மனைப் படுத்து;
செறி வளை ஆய்ச்சியர் சிலருடன் கூடி,
நறு மலர்க் கோதையை நாள்-நீர் ஆட்டி:
‘கூடல் மகளிர் கோலம் கொள்ளும்
ஆடகப் பைம் பூண் அரு விலை அழிப்ப,
செய்யாக் கோலமொடு வந்தீர்க்கு என் மகள்
ஐயை, காணீர், அடித்தொழில் ஆட்டி;
பொன்னின் பொதிந்தேன், புனை பூங் கோதை!
என்னுடன் நங்கை, ஈங்கு இருக்க’ எனத் தொழுது,
‘மாதவத்துஆட்டி வழித் துயர் நீக்கி,
ஏதம் இல்லா இடம் தலைப்படுத்தினள்;
நோதகவு உண்டோ, நும் மகனார்க்கு இனி?-
சாவக நோன்பிகள் அடிகள் ஆதலின்,
நாத்தூண் நங்கையொடு நாள் வழிப்படூஉம்
அடிசில் ஆக்குதற்கு அமைந்த நல் கலங்கள்
நெடியாது அளிமின், நீர்’ எனக் கூற-

"இடைக்குல மடந்தையர் கண்ணகிக்குக் கொடுத்த பொருள்கள்"




25
இடைக்குல மடந்தையர், இயல்பின் குன்றா
மடைக்கலம்-தன்னொடு மாண்பு உடை மரபின்
கோளிப் பாகல் கொழுங் கனித் திரள் காய்,
வாள் வரிக் கொடுங் காய், மாதுளம் பசுங் காய்,
மாவின் கனியொடு வாழைத் தீம் கனி,
சாலி அரிசி, தம் பால் பயனொடு,
‘கோல் வளை மாதே! கொள்க’ எனக் கொடுப்ப-

"ஐயையின் உதவியுடன் கண்ணகி அமுது ஆக்கல்"


30
மெல் விரல் சிவப்ப, பல்வேறு பசுங் காய்
கொடு வாய்க் குயத்து விடுவாய்செய்ய,
திரு முகம் வியர்த்தது; செங் கண் சேந்தன;
கரி புற அட்டில் கண்டனள் பெயர,
வை எரி மூட்டிய ஐயை-தன்னொடு
கை அறி மடைமையின் காதலற்கு ஆக்கி-
"கோவலனுக்குக் கண்ணகி உணவு படைத்தல்"

35




40




45
தாலப் புல்லின் வால் வெண் தோட்டுக்
கை வல் மகடூஉக் கவின் பெறப் புனைந்த
செய் வினைத் தவிசில் செல்வன் இருந்தபின்,
கடி மலர் அங்கையின் காதலன் அடி நீர்
சுடு மண் மண்டையின் தொழுதனள் மாற்றி,
மண்ணக மடந்தையை மயக்கு ஒழிப்பனள்போல்,
தண்ணீர் தெளித்து, தன் கையால் தடவி,
குமரி வாழையின் குருத்து அகம் விரித்து-ஈங்கு,
‘அமுதம் உண்க, அடிகள்! ஈங்கு என;
அரசர் பின்னோர்க்கு அரு மறை மருங்கின்
உரிய எல்லாம் ஒரு முறை கழித்து-

"ஐயையும் மாதரியும் கோவலனையும் கண்ணகியையும் பாராட்டுதல்"




50
‘ஆங்கு, ஆயர் பாடியின் அசோதை பெற்றெடுத்த
பூவைப் புதுமலர் வண்ணன் கொல்லோ,
நல் அமுது உண்ணும் நம்பி! ஈங்கு,
பல் வளைத் தோளியும் பண்டு நம் குலத்து,
தொழுனை யாற்றினுள் தூ மணி வண்ணனை
விழுமம் தீர்த்த விளக்குக்கொல்!’ என;
ஐயையும் தவ்வையும் விம்மிதம் எய்தி,
‘கண் கொளா நமக்கு, இவர் காட்சி, ஈங்கு’ என-

"கோவலன் கண்ணகியை நோக்கி, கழிந்ததற்கு இரங்கிக் கூறுதல்"


55




60




65




70
உண்டு இனிது இருந்த உயர் பேராளற்கு
அம் மென் திரையலோடு அடைக்காய் ஈத்த
மை ஈர் ஓதியை, ‘வருக’ எனப் பொருந்தி,
“கல் அதர் அத்தம் கடக்க யாவதும்
வல்லுநகொல்லோ மடந்தை மெல் அடி!” என,
வெம் முனை அரும் சுரம் போந்ததற்கு இரங்கி,
எம் முதுகுரவர் என் உற்றனர்கொல்?
மாயம் கொல்லோ, வல் வினைகொல்லோ?
யான் உளம் கலங்கி யாவதும் அறியேன்:
வறு மொழியாளரொடு வம்பப் பரத்தரொடு
குறு மொழிக் கோட்டி, நெடு நகை புக்கு,
பொச்சாப்புண்டு, பொருள் உரையாளர்
நச்சுக் கொன்றேற்கு நல் நெறி உண்டோ?
இரு முதுகுரவர் ஏவலும் பிழைத்தேன்;
சிறு முதுகுறைவிக்குச் சிறுமையும் செய்தேன்;
வழு எனும் பாரேன்; மா நகர் மருங்கு ஈண்டு
எழுக என எழுந்தாய்; என் செய்தனை!’ என-

"கண்ணகியின் பணிவுரை"





75




80
‘அறவோர்க்கு அளித்தலும், அந்தணர் ஓம்பலும்,
துறவோர்க்கு எதிர்தலும், தொல்லோர் சிறப்பின்
விருந்து எதிர்கோடலும், இழந்த என்னை, நும்
பெருமகள்-தன்னொடும் பெரும் பெயர்த் தலைத் தாள்
மன் பெரும் சிறப்பின் மா நிதிக் கிழவன் 75
முந்தை நில்லா முனிவு இகந்தனனா,
அற்பு உளம் சிறந்து ஆங்கு, அருள் மொழி அளைஇ,
என் பாராட்ட, யான் அகத்து ஒளித்த
நோயும் துன்பமும் நொடிவது போலும் என்
வாய் அல் முறுவற்கு அவர் உள் அகம் வருந்த, 80
போற்றா ஒழுக்கம் புரிந்தீர்; யாவதும்
மாற்றா உள்ள வாழ்க்கையேன் ஆதலின்,
ஏற்று எழுந்தனன், யான்’என்று அவள் கூற-

"கோவலன் கண்ணகியைப் பாராட்டி, ஒரு சிலம்பை எடுத்துச் சென்று விற்று வருவேன்’ என்று கூறி, விடைபெற்றுச் செல்லுதல்
"


85




90




95
‘குடி முதல் சுற்றமும், குற்றிளையோரும்;
அடியோர் பாங்கும், ஆயமும், நீங்கி;
நாணமும், மடனும், நல்லோர் ஏத்தும்,
பேணிய கற்பும், பெரும் துணை ஆக;
என்னொடு போந்து, ஈங்கு என் துயர் களைந்த
பொன்னே, கொடியே, புனை பூங் கோதாய்,
நாணின் பாவாய், நீள் நில விளக்கே,
கற்பின் கொழுந்தே, பொற்பின் செல்வி!
சீறடிச் சிலம்பின் ஒன்று கொண்டு, யான் போய்,
மாறி வருவன்; மயங்கா தொழிக’ என-
கருங் கயல் நெடுங் கண் காதலி-தன்னை
ஒருங்குடன் தழீஇ, உழையோர் இல்லா
ஒரு தனி கண்டு, தன் உள் அகம் வெதும்பி,
வரு பனி கரந்த கண்ணன் ஆகி,
பல் ஆன் கோவலர் இல்லம் நீங்கி,
வல்லா நடையின் மறுகில் செல்வோன்.









உரை





உரை
 

"தீய நிமித்தம்"

100
இமில் ஏறு எதிர்ந்தது, இழுக்கு என அறியான்,
தன் குலம் அறியும் தகுதி அன்று ஆதலின்-

உரை

"கடைத்தெருவில் பொற்கொல்லனைக் கண்டு, கோவலன் வினாவுதல்"








110
தாது எரு மன்றம் தான் உடன் கழிந்து,
மாதர் வீதி மறுகிடை நடந்து,
பீடிகைத் தெருவில் பெயர்வோன்-ஆங்கண்,
கண்ணுள் வினைஞர், கைவினை முற்றிய
நுண்வினைக் கொல்லர், நூற்றுவர் பின் வர,
மெய்ப்பை புக்கு, விலங்கு நடைச் செலவின்
கைக் கோல் கொல்லனைக் கண்டனனாகி,
‘தென்னவன் பெயரொடு சிறப்புப் பெற்ற
பொன் வினைக் கொல்லன் இவன்’ எனப் பொருந்தி,
‘காவலன் தேவிக்கு ஆவதோர் காற்கு அணி
நீ விலையிடுதற்கு ஆதியோ?’ என-


உரை







உரை

"பொற்கொல்லன் உரைத்த விடை"



115
‘அடியேன் அறியேன் ஆயினும், வேந்தர்
முடி முதல் கலன்கள் சமைப்பேன் யான்’ என,
கூற்றத் தூதன் கைதொழுது ஏத்த-

"கோவலன் சிலம்பைக் காட்ட, பொற்கொல்லன் அதன் தகுதி பற்றிக் கூறுதல்"





120
போற்று-அரும் சிலம்பின் பொதி வாய் அவிழ்த்தனன்:
மத்தக மணியொடு வயிரம் கட்டிய
பத்திக் கேவணப் பசும் பொன் குடைச் சூல்
சித்திரச் சிலம்பின் செய்வினை எல்லாம்
பொய்த் தொழில் கொல்லன் புரிந்துடன் நோக்கி,
‘கோப்பெருந்தேவிக்கு அல்லதை, இச் சிலம்பு
யாப்புறவு இல்லை’ என- ‘முன்போந்து,
உரை



உரை

"வேந்தனுக்குச் சிலம்பு பற்றித் தெரிவித்து வருமளவும் தன் குடிலில் தங்கியிருக்க என்று பொற்கொல்லன் சொல்ல, கோவலன் அதன் அயலில் உள்ள தேவ கோட்டத்தின் மதில் புறத்துச் செல்லுதல்"



125
விறல் மிகு வேந்தற்கு விளம்பி யான் வர, என்
சிறு குடில் அங்கண் இருமின் நீர்’ என,
கோவலன் சென்று, அக் குறுமகன் இருக்கை ஓர்
தேவ கோட்டச் சிறைஅகம் புக்கபின்-



உரை

"பொற்கொல்லன் தீய எண்ணத்துடன் செல்லுதல்"




130
‘கரந்து யான் கொண்ட கால்-அணி ஈங்கு,
பரந்து வெளிப்படாமுன்னம் மன்னற்கு,
புலம் பெயர் புதுவனின் போக்குவன் யான்’ என,
கலங்கா உள்ளம் கரந்தனன் செல்வோன்-



உரை
 

"கோப்பெருந்தேவியின் கோயிலை நோக்கி மன்னவன் செல்லுதல்"




135




140
‘கூடல் மகளிர் ஆடல் தோற்றமும்,
பாடல் பகுதியும், பண்ணின் பயங்களும்,
காவலன் உள்ளம் கவர்ந்தன’ என்று, தன்
ஊடல் உள்ளம் உள் கரந்து ஒளித்து,
தலைநோய் வருத்தம் தன்மேல் இட்டு,
குலமுதல் தேவி கூடாது ஏக,
மந்திரச் சுற்றம் நீங்கி, மன்னவன்
சிந்து அரி நெடுங் கண் சிலதியர்-தம்மொடு
கோப்பெருந்தேவி கோயில் நோக்கி,
காப்பு உடை வாயில் கடை காண் அகவையின்-

மன்னனைக் கண்டு பொற்கொல்லன் செய்தி தெரிவித்தல




145
வீழ்ந்தனன் கிடந்து, தாழ்ந்து, பல ஏத்தி,
‘கன்னகம் இன்றியும், கவைக்கோல் இன்றியும்,
துன்னிய மந்திரம் துணை எனக் கொண்டு,
வாயிலாளரை மயக்கு துயில் உறுத்து,
கோயில் சிலம்பு கொண்ட கள்வன்
கல்லென் பேர் ஊர்க் காவலர்க் கரந்து, என்
சில்லைச் சிறு குடில் அகத்து இருந்தோன்’ என-
உரை





உரை

"மன்னவன் வினைவசத்தால் மயங்கி, காவலர்க்கு இட்ட கட்டளை"



150
வினை விளை காலம் ஆதலின், யாவதும்
சினை அலர் வேம்பன் தேரான் ஆகி,
ஊர் காப்பாளரைக் கூவி, ‘ஈங்கு என்
தாழ் பூங் கோதை-தன் கால் சிலம்பு
கன்றிய கள்வன் கையதுஆகின்,
கொன்று, அச் சிலம்பு கொணர்க ஈங்கு’ என,





உரை

"கோவலனிடம் காவலாளருடன் மீண்ட பொற்கொல்லன் ‘இவர் சிலம்பு காண வந்தோர்’ என்று, சிலம்பைப் பற்றிக் கூறுதல்"


155




160
காவலன் ஏவ- கருந் தொழில் கொல்லனும்,
‘ஏவல் உள்ளத்து எண்ணியது முடித்து’ என,
தீவினை முதிர் வலைச் சென்று பட்டிருந்த
கோவலன்-தன்னைக் குறுகினனாகி-
‘வலம் படு தானை மன்னவன் ஏவ,
சிலம்பு காணிய வந்தோர் இவர்’ என,
செய்வினைச் சிலம்பின் செய்தி எல்லாம்
பொய் வினைக் கொல்லன் புரிந்துடன் காட்ட-



உரை



உரை

"‘கோவலன் கொலைப்படுமகன் அல்லன்’ என்ற காவலாளருக்குப் பொற்கொல்லன் கள்வரின் இயல்புகளை எடுத்துரைத்தல்"





165




170
‘இலக்கண முறைமையின் இருந்தோன், ஈங்கு, இவன்
கொலைப்படு மகன் அலன்’ என்று கூறும்
அரும் திறல் மாக்களை அகநகைத்து உரைத்து,
கருந் தொழில் கொல்லன் காட்டினன் உரைப்போன்.
‘மந்திரம், தெய்வம், மருந்தே, நிமித்தம்,
தந்திரம், இடனே, காலம், கருவி, என்று
எட்டுடன் அன்றே-இழுக்கு உடை மரபின்
கட்டு உண் மாக்கள் துணை எனத் திரிவது?
மருந்தில் பட்டீர் ஆயின், யாவரும்
பெரும் பெயர் மன்னனின் பெரு நவைப் பட்டீர்:



உரை



உரை

உரை

"கள்வரின் எட்டுத் துணைகள்"



175




180




185
மந்திரம் நாவிடை வழுத்துவர் ஆயின்,
இந்திர-குமரரின் யாம் காண்குவமோ?
தெய்வத் தோற்றம் தெளிகுவர் ஆயின்,
கைஅகத்து உறு பொருள் காட்டியும் பெயர்குவர்;
மருந்தின் நம்கண் மயக்குவர் ஆயின்,
இருந்தோம் பெயரும் இடனும்-மார் உண்டோ?
நிமித்தம் வாய்த்திடின் அல்லது, யாவதும்
புகற்கிலர், அரும் பொருள் வந்து கைப் புகுதினும்;
தந்திர-கரணம் எண்ணுவர் ஆயின்,
இந்திரன் மார்பத்து ஆரமும் எய்துவர்;
இவ் இடம் இப் பொருள் கோடற்கு இடம் எனின்,
அவ் இடத்து அவரை யார் காண்கிற்பார்?
காலம் கருதி அவர் பொருள் கையுறின்,
மேலோர் ஆயினும் விலக்கலும் உண்டோ?
கருவி கொண்டு அவர் அரும் பொருள் கையுறின்,
இரு நில மருங்கின் யார் காண்கிற்பார்?
இரவே பகலே என்று இரண்டு இல்லை;
கரவு இடம் கேட்பின், ஓர் புகல் இடம் இல்லை.

உரை

உரை

உரை

உரை

உரை

உரை

உரை

உரை

உரை
 

"கள்வன் ஒருவனின் செய்தி"

190




195




200
தூதர் கோலத்து வாயிலின் இருந்து,
மாதர் கோலத்து வல் இருள் புக்கு,
விளக்கு நிழலில் துளக்கிலன் சென்று, ஆங்கு,
இளங்கோ வேந்தன் துளங்கு ஒளி ஆரம்
வெயில் இடு வயிரத்து, மின்னின் வாங்க,
துயில்கண் விழித்தோன் தோளில் காணான்
உடைவாள் உருவ, உறை கை வாங்கி,
எறிதொறும் செறித்த இயல்பிற்கு அரற்றான்.
மல்லின் காண, மணித் தூண் காட்டி,
கல்வியின் பெயர்ந்த கள்வன்-தன்னைக்
கண்டோர் உளர் எனின் காட்டும்: ஈங்கு இவர்க்கு
உண்டோ உலகத்து ஒப்போர்?’ என்று, அக்
கருந் தொழில் கொல்லன் சொல்ல- ஆங்கு, ஓர்












உரை
 

"காவல் இளைஞன் ஒருவன் கள்வனைப் பற்றிக் கூறிய நிகழ்ச்சி"



205




210
திருந்து வேல் தடக் கை இளையோன் கூறும்:
‘நிலன் அகழ் உளியன், நீலத் தானையன்,
கலன் நசை வேட்கையின் கடும் புலி போன்று,
மாரி நடு நாள் வல் இருள் மயக்கத்து,
ஊர் மடி கங்குல் ஒருவன் தோன்ற,
கை வாள் உருவ, என் கை வாள் வாங்க,
எவ்வாய் மருங்கினும் யான் அவன் கண்டிலேன்;
அரிது இவர் செய்தி; அலைக்கும் வேந்தனும்;
உரியது ஒன்று உரைமின், உறு படையீர்!’ என-
உரை







உரை
 

"கல்லாக் களிமகன் ஒருவன் வாளால் எறிய, கோவலன் குருதி சோர, மண்ணின்மேல் மாண்டு விழுதல்
"




215
கல்லாக் களிமகன் ஒருவன் கையில்
வெள் வாள் எறிந்தனன்; விலங்கூடு அறுத்தது;
புண் உமிழ் குருதி பொழிந்துடன் பரப்ப,
மண்ணக மடந்தை வான் துயர் கூர,
காவலன் செங்கோல் வளைஇய, வீழ்ந்தனன்,
கோவலன் பண்டை ஊழ்வினை உருத்து-என்.





உரை
 

"வெண்பா"

நண்ணும், இரு வினையும்; நண்ணுமின்கள், நல் அறமே-
கண்ணகி-தன் கேள்வன் காரணத்தான், மண்ணில்
வளையாத செங்கோல் வளைந்ததே; பண்டை
விளைவாகி வந்த வினை.



உரை