Cilipidikaram-Padipurai
மதுரைக் காண்டம்

8. துன்ப மாலை


"கதிரவனது சொல்லைக் கேட்ட கண்ணகி, எஞ்சிய ஒற்றைச் சிலம்பை ஏந்தி நகரினுள் புக்கு, நகர மாந்தரை நோக்கி முறையிட்டு, அழுதல"





5
ஆங்கு,
ஆயர் முதுமகள், ஆடிய சாயலாள்,
பூவும், புகையும், புனை சாந்தும், கண்ணியும்,
நீடு நீர் வையை நெடு மால் அடி ஏத்த,
தூவி, துறைபடியப் போயினாள், மேவிக்
குரவை முடிவில்-ஓர் ஊர் அரவம் கேட்டு,
விரைவொடு வந்தாள் உளள்.
"கொலைச் செய்தி அறிந்து வந்த ஆய்மகள் பேசாது நிற்க, கண்ணகி அவளை நோக்கி ஐயுற்றுப் பேசுதல்"


10




15




20
அவள்தான்,
சொல்லாடாள் சொல்லாடாள் நின்றாள்அந் நங்கைக்குச்
சொல்லாடும் சொல்லாடுந் தான்
‘எல்லா! ஓ!-
காதலன் காண்கிலேன்; கலங்கி நோய் கைம்மிகும்;
ஊது உலை தோற்க உயிர்க்கும் என் நெஞ்சு-அன்றே;
ஊது உலை தோற்க உயிர்க்கும் என் நெஞ்சு ஆயின்,
ஏதிலார் சொன்னது எவன்? வாழியோ, தோழீ!
நன் பகல் போதே நடுக்கு நோய் கைம்மிகும்;
அன்பனைக் காணாது அலவும் என் நெஞ்சு-அன்றே;
அன்பனைக் காணாது அலவும் என் நெஞ்சு ஆயின்,
மன்பதை சொன்னது எவன்? வாழியோ, தோழீ!
தஞ்சமோ! தோழீ! தலைவன் வரக் காணேன்;
வஞ்சமோ உண்டு; மயங்கும் என் நெஞ்சு-அன்றே;
வஞ்சமோ உண்டு; மயங்கும் என் நெஞ்சு ஆயின்,
எஞ்சலார் சொன்னது எவன்? வாழியோ, தோழீ!’

"ஆய்மகள் உண்மை உரைத்தல"


25
சொன்னது:
‘அரசு உறை கோயில் அணி ஆர் ஞெகிழம்
கரையாமல் வாங்கிய கள்வனாம் என்றே.
கரையாமல் வாங்கிய கள்வனாம் என்றே,
குரை கழல் மாக்கள் கொலை குறித்தனரே!’

"கண்ணகியின் துயர நிலை"


30




35




40




45
எனக் கேட்டு,
பொங்கி எழுந்தாள்; விழுந்தாள், பொழி கதிர்த்
திங்கள் முகிலோடும் சேண் நிலம் கொண்டென;
செங் கண் சிவப்ப அழுதாள்; தன் கேள்வனை,
‘எங்கணாஅ!’ என்னா இனைந்து, ஏங்கி, மாழ்குவாள்;
‘இன்புறு தம் கணவர் இடர் எரி அகம் மூழ்க,
துன்புறுவன நோற்றுத் துயர் உறு மகளிரைப் போல்,
மன்பதை அலர் தூற்ற, மன்னவன் தவறு இழைப்ப,
அன்பனை இழந்தேன் யான் அவலம் கொண்டு அழிவலோ?
நறை மலி வியல் மார்பின் நண்பனை இழந்து ஏங்கி,
துறை பல திறம் மூழ்கித் துயர் உறு மகளிரைப் போல்,
மறனொடு திரியும் கோல் மன்னவன் தவறு இழைப்ப,
அறன் எனும் மடவோய்! யான் அவலம் கொண்டு அழிவலோ?
தம் உறு பெரும் கணவன் தழல் எரிஅகம் மூழ்க,
கைம்மை கூர் துறை மூழ்கும் கவலைய மகளிரைப் போல்,
செம்மையின் இகந்த கோல் தென்னவன் தவறு இழைப்ப,
இம்மையும் இசை ஒரீஇ, இனைந்து, ஏங்கி, அழிவலோ?’
உரை



உரை



உரை



உரை

"ஆய்ச்சியர் முன்னிலையில் கண்ணகி கதிரவனை விளித்து, ‘என் கணவன் கள்வனோ?’ என வினவுதல
"





50
காணிகா,
வாய்வதின் வந்த குரவையின் வந்து ஈண்டும்
ஆய மட மகளிர் எல்லீரும் கேட்டீமின்;
ஆய மட மகளிர் எல்லீரும் கேட்டைக்க;
பாய் திரை வேலிப் படு பொருள் நீ அறிதி,
காய் கதிர்ச் செல்வனே! கள்வனோ, என் கணவன்?’-
உரை




 
"அசரீரி வாக்கு"




‘கள்வனோ அல்லன்; கருங் கயல் கண் மாதராய்!
ஒள் எரி உண்ணும், இவ் ஊர்’ என்றது ஒரு குரல்.

உரை