வன்னி மரமும் மடைப்பளியும்
சான்றாக
முன் நிறுத்திக் காட்டிய மொய் குழலாள்; பொன்னிக்
கரையில், “மணல் பாவை நின் கணவன் ஆம்” என்று,
உரைசெய்த மாதரொடும் போகாள், திரை வந்து
அழியாது சூழ்போக, ஆங்கு உந்தி நின்ற
வரி ஆர் அகல் அல்குல் மாதர்; உரைசான்ற
மன்னன் கரிகால் வளவன் மகள் வஞ்சிக் கோன்-
தன்னைப் புனல் கொள்ள, தான் புனலின் பின் சென்று,
“கல் நவில் தோளாயோ!” என்ன, கடல் வந்து,
முன் நிறுத்திக் காட்ட, அவனைத் தழீஇக்கொண்டு,
பொன் அம் கொடி போலப் போதந்தாள்; மன்னி,
மணல் மலி பூங் கானல் வரு கலன்கள் நோக்கி,
கணவன் வரக் கல் உருவம் நீத்தாள்; இணை ஆய
மாற்றாள் குழவி விழ, தன் குழவியும் கிணற்று
வீழ்த்து, ஏற்றுக்கொண்டு எடுத்த வேல் கண்ணாள்; வேற்றொருவன்
நீள் நோக்கம் கண்டு, “நிறை மதி வாள் முகத்தைத்
தான் ஓர் குரக்கு முகம் ஆக!” என்று, போன
கொழுநன் வரவே, குரக்கு முகம் நீத்த
பழு மணி அல்குல் பூம் பாவை; “விழுமிய,
பெண் அறிவு என்பது பேதைமைத்தே என்று உரைத்த
நுண் அறிவினோர் நோக்கம்; நோக்காதே, எண் இலேன்,
வண்டல் அயர்விடத்து, யான் ஓர் மகள் பெற்றால்,
ஒண்-தொடி! நீ ஓர் மகன் பெறின், கொண்ட
கொழுநன் அவளுக்கு என்று, யான் உரைத்த மாற்றம்
கெழுமியவள் உரைப்பக் கேட்ட விழுமத்தான்
சிந்தை நோய் கூரும், திருவிலேற்கு” என்று எடுத்து,
தந்தைக்குத் தாய் உரைப்பக் கேட்டாளாய், முந்தி, ஓர்
கோடிக் கலிங்கம் உடுத்து, குழல் கட்டி,
நீடித் தலையை வணங்கி, தலை சுமந்த
ஆடகப் பூம் பாவை-அவள்; போல்வார் நீடிய
மட்டு ஆர் குழலார் பிறந்த பதிப் பிறந்தேன்;
"கண்ணகி
தன் இடமுலையைத் திருகி எடுத்து, மதுரையின்மீது எறிதல்"
40
45
50
‘நான்மாடக் கூடல்
மகளிரும் மைந்தரும்,
வானக் கடவுளரும், மாதவரும், கேட்டீமின்:
யான் அமர் காதலன்-தன்னைத் தவறு இழைத்த
கோநகர் சீறினேன்; குற்றமிலேன் யான்’ என்று,
இட முலை கையால் திருகி, மதுரை
வலமுறை மும் முறை வாரா, அலமந்து,
மட்டு ஆர் மறுகின் மணி முலையை வட்டித்து,
விட்டாள் எறிந்தாள், விளங்கு இழையாள்-
நீல நிறத்துத் திரி செக்கர் வார் சடைப்
பால் புரை வெள் எயிற்றுப் பார்ப்பனக் கோலத்து,
மாலை எரி அங்கி வானவன்-தான் தோன்றி,
‘மா பத்தினி! நின்னை மாணப் பிழைத்த நாள்
பாய் எரி இந்தப் பதிஊட்ட, பண்டே ஓர்
ஏவல் உடையேனால்; யார் பிழைப்பார், ஈங்கு?’ என்ன-