Cilipidikaram-Padipurai
மதுரைக் காண்டம்

 11. வஞ்சின மாலை


"கோப்பெருந்தேவியை நோக்கிக் கண்ணகி கூறுத"

‘கோவேந்தன் தேவி! கொடுவினை ஆட்டியேன்
யாவும் தெரிய இயல்பினேன் ஆயினும்,
முற்பகல் செய்தான் பிறன் கேடு தன் கேடு
பிற்பகல் காண்குறூஉம் பெற்றிய-காண்:

"
கற்புடை மங்கையர் எழுவர் வரலாறு நல் பகலே,"

5




10





15





20



25




30





35
வன்னி மரமும் மடைப்பளியும் சான்றாக
முன் நிறுத்திக் காட்டிய மொய் குழலாள்; பொன்னிக்
கரையில், “மணல் பாவை நின் கணவன் ஆம்” என்று,
உரைசெய்த மாதரொடும் போகாள், திரை வந்து
அழியாது சூழ்போக, ஆங்கு உந்தி நின்ற
வரி ஆர் அகல் அல்குல் மாதர்; உரைசான்ற
மன்னன் கரிகால் வளவன் மகள் வஞ்சிக் கோன்-
தன்னைப் புனல் கொள்ள, தான் புனலின் பின் சென்று,
“கல் நவில் தோளாயோ!” என்ன, கடல் வந்து,
முன் நிறுத்திக் காட்ட, அவனைத் தழீஇக்கொண்டு,
பொன் அம் கொடி போலப் போதந்தாள்; மன்னி,
மணல் மலி பூங் கானல் வரு கலன்கள் நோக்கி,
கணவன் வரக் கல் உருவம் நீத்தாள்; இணை ஆய
மாற்றாள் குழவி விழ, தன் குழவியும் கிணற்று
வீழ்த்து, ஏற்றுக்கொண்டு எடுத்த வேல் கண்ணாள்; வேற்றொருவன்
நீள் நோக்கம் கண்டு, “நிறை மதி வாள் முகத்தைத்
தான் ஓர் குரக்கு முகம் ஆக!” என்று, போன
கொழுநன் வரவே, குரக்கு முகம் நீத்த
பழு மணி அல்குல் பூம் பாவை; “விழுமிய,
பெண் அறிவு என்பது பேதைமைத்தே என்று உரைத்த
நுண் அறிவினோர் நோக்கம்; நோக்காதே, எண் இலேன்,
வண்டல் அயர்விடத்து, யான் ஓர் மகள் பெற்றால்,
ஒண்-தொடி! நீ ஓர் மகன் பெறின், கொண்ட
கொழுநன் அவளுக்கு என்று, யான் உரைத்த மாற்றம்
கெழுமியவள் உரைப்பக் கேட்ட விழுமத்தான்
சிந்தை நோய் கூரும், திருவிலேற்கு” என்று எடுத்து,
தந்தைக்குத் தாய் உரைப்பக் கேட்டாளாய், முந்தி, ஓர்
கோடிக் கலிங்கம் உடுத்து, குழல் கட்டி,
நீடித் தலையை வணங்கி, தலை சுமந்த
ஆடகப் பூம் பாவை-அவள்; போல்வார் நீடிய
மட்டு ஆர் குழலார் பிறந்த பதிப் பிறந்தேன்;
"அரசோடு மதுரையையும் அழிப்பேன் என்று கண்ணகி கூறி, நீங்குதல்"

பட்டாங்கு யானும் ஓர் பத்தினியே ஆமாகில்,
ஒட்டேன்; அரசோடு ஒழிப்பேன் மதுரையும்! என்
பட்டிமையும் காண்குறுவாய் நீ’ என்னா, விட்டு அகலா-
  "கண்ணகி தன் இடமுலையைத் திருகி எடுத்து, மதுரையின்மீது எறிதல்"  


40





45



50
‘நான்மாடக் கூடல் மகளிரும் மைந்தரும்,
வானக் கடவுளரும், மாதவரும், கேட்டீமின்:
யான் அமர் காதலன்-தன்னைத் தவறு இழைத்த
கோநகர் சீறினேன்; குற்றமிலேன் யான்’ என்று,
இட முலை கையால் திருகி, மதுரை
வலமுறை மும் முறை வாரா, அலமந்து,
மட்டு ஆர் மறுகின் மணி முலையை வட்டித்து,
விட்டாள் எறிந்தாள், விளங்கு இழையாள்-
நீல நிறத்துத் திரி செக்கர் வார் சடைப்
பால் புரை வெள் எயிற்றுப் பார்ப்பனக் கோலத்து,
மாலை எரி அங்கி வானவன்-தான் தோன்றி,
‘மா பத்தினி! நின்னை மாணப் பிழைத்த நாள்
பாய் எரி இந்தப் பதிஊட்ட, பண்டே ஓர்
ஏவல் உடையேனால்; யார் பிழைப்பார், ஈங்கு?’ என்ன-
     
  "கண்ணகியின் கட்டளையால் மதுரையில் தீ எழல்"  
     
   
55

 ‘பார்ப்பார், அறவோர், பசு, பத்தினிப் பெண்டிர்,
மூத்தோர், குழவி, எனும் இவரைக் கைவிட்டு,
தீத் திறத்தார் பக்கமே சேர்க’ என்று, காய்த்திய
பொன்-தொடி ஏவ, புகை அழல் மண்டிற்றே-
நல் தேரான் கூடல் நகர்.

"வெண்பா"
 பொற்பு வழுதியும், தன் பூவையரும், மாளிகையும்,
வில் பொலியும் சேனையும், மா வேழமும், கற்பு உண்ண;
தீத் தரு வெங் கூடல் தெய்வக் கடவுளரும்
மாத்துவத்தான் மறைந்தார் மற்று.