Cilipidikaram-Padipurai
புகார்க் காண்டம்

4. அந்திமாலைச் சிறப்புச் செய் காதை


மாலைப் பொழுதின் வரவு





5
விரி கதிர் பரப்பி, உலகம் முழுது ஆண்ட
ஒரு தனித் திகிரி உரவோன் காணேன்;
அம் கண் வானத்து, அணி நிலா விரிக்கும்
திங்கள் அம் செல்வன் யாண்டு உளன்கொல்?’ என,
திசை முகம் பசந்து, செம் மலர்க் கண்கள்
முழு நீர் வார, முழு மெயும் பனித்து,
திரை நீர் ஆடை இரு நில மடந்தை
அரைசு கெடுத்து, அலம்வரும் அல்லல்காலை-

10
கறை கெழு குடிகள் கை தலை வைப்ப,
அறைபோகு குடிகளொடு ஒரு திறம் பற்றி,
வலம்படு தானை மன்னர் இல்வழி,
புலம்பட இறுத்த விருந்தின் மன்னரின்,


15




20
தாழ் துணை துறந்தோர் தனித் துயர் எய்த;
காதலர்ப் புணர்ந்தோர் களி மகிழ்வு எய்த;
குழல் வளர் முல்லையில் கோவலர் - தம்மொடு
மழலைத் தும்பி வாய் வைத்து ஊத;
அறுகால் குறும்பு எறிந்து, அரும்பு பொதி வாசம்
சிறுகால் செல்வன் மறுகில் தூற்ற;
எல் வளை மகளிர் மணி விளக்கு எடுப்ப,
மல்லல் மூதூர் மாலை வந்து இறுத்தென -

நிலா - முற்றத்தில் கோவலனும் மாதவியும் களித்திருத்தல்





25
இளையர் ஆயினும் பகை அரசு கடியும்,
செரு மாண் தென்னர் குலமுதல் ஆகலின்
அந்தி வானத்து, வெண் பிறை தோன்றி,
புன்கண் மாலைக் குறும்பு எறிந்து ஓட்டி,
பான்மையின் திரியாது பால் கதிர் பரப்பி,
மீன் - அரசு ஆண்ட வெள்ளி விளக்கத்து



30
இல் வளர் முல்லையொடு மல்லிகை அவிழ்ந்த
பல் பூஞ் சேக்கைப் பள்ளியுள் பொலிந்து,
செந் துகிர்க் கோவை சென்று ஏந்து அல்குல்
அம் துகில் மேகலை அசைந்தன வருந்த
நிலவுப் பயன் கொள்ளும் நெடு நிலா - முற்றத்து -
கலவியும் புலவியும் காதலற்கு அளித்து, ஆங்கு;
ஆர்வ நெஞ்சமொடு கோவலற்கு எதிரி,
கோலம் கொண்ட மாதவி அன்றியும் -
 
காதலரைக் கூடிய மகளிரின் களி மகிழ்வு

35
குட திசை மருங்கின் வெள் அயிர் - தன்னொடும்
குண திசை மருங்கின் கார் அகில் துறந்து;
 
வடமலைப் பிறந்த வான் கேழ் வட்டத்து,
தென்மலைப் பிறந்த சந்தனம் மறுக;

40




45
தாமரைக் கொழு முறி, தாதுபடு செழு மலர்,
காமரு குவளை, கழுநீர் மா மலர்,
பைந் தளிர்ப் படலை; பரூஉக் காழ் ஆரம்;
சுந்தரச் சுண்ணத் துகளொடும் அளைஇச்
சிந்துபு பரிந்த செழும் பூஞ் சேக்கை,
மந்த - மாருதத்து மயங்கினர் மலிந்து, ஆங்கு,
ஆவியங் கொழுநர் அகலத்து ஒடுங்கி,
காவி அம் கண்ணார் களித் துயில் எய்த -

கணவனைப் பிரிந்து வாழும் கண்ணகியின் துயர நிலை





50




55
அம் செஞ் சீறடி அணி சிலம்பு ஒழிய,
மென் துகில் அல்குல் மேகலை நீங்க,
கொங்கை முன்றில் குங்குமம் எழுதாள்,
மங்கல அணியின் பிறிது அணி மகிழாள்,
கொடுங் குழை துறந்து வடிந்து வீழ் காதினள்,
திங்கள் வாள் முகம் சிறு வியர்ப் பிரிய,
செங் கயல் நெடுங் கண் அஞ்சனம் மறப்ப,
பவள வாள் நுதல் திலகம் இழப்ப,
தவள வாள் நகை கோவலன் இழப்ப,
மை இருங் கூந்தல் நெய் அணி மறப்ப,
கையறு நெஞ்சத்துக் கண்ணகி அன்றியும் -

காதலரைப் பிரிந்த மாதர்களுடைய நிலை




60




65




70
காதலர்ப் பிரிந்த மாதர் நோதக,
ஊது உலைக் குருகின் உயிர்த்தனர் ஒடுங்கி,
வேனில் - பள்ளி மேவாது கழிந்து,
கூதிர்ப் பள்ளிக் குறுங்கண் அடைத்து, மலயத்து ஆரமும் மணி முத்து ஆரமும்
அலர் முலை ஆகத்து அடையாது வருந்த,
தாழிக் குவளையொடு தண் செங்கழுநீர்
வீழ் பூஞ் சேக்கை மேவாது கழிய,
துணை புணர் அன்னத் தூவியின் செறித்த
இணை அணை மேம்படத் திருந்து துயில் பெறாஅது,
உடைப் பெரும் கொழுநரோடு ஊடல் காலத்து
இடைக் குமிழ் எறிந்து, கடைக் குழை ஓட்டி,
கலங்கா உள்ளம் கலங்க, கடை சிவந்து
விலங்கி நிமிர் நெடுங் கண் புலம்பு, முத்து உறைப்ப -

வைகறை வரையில் காமன் திரிதல்






75
அன்னம் மெல் நடை - நல் நீர்ப் பொய்கை -
ஆம்பல் நாறும் தேம் பொதி நறு விரைத்
தாமரைச் செவ் வாய், தண் அறல் கூந்தல்;
பாண் வாய் வண்டு நோதிறம் பாட,
காண்வரு குவளைக் கண்மலர் விழிப்ப;




80
புள் வாய் முரசமொடு, பொறி மயிர் வாரணத்து
முள் வாய்ச் சங்கம் முறை முறை ஆர்ப்ப;
உரவுநீர்ப் பரப்பின் ஊர் துயில் எடுப்பி,
இரவுத் தலைபெயரும் வைகறைகாறும் -
அரை இருள் யாமத்தும் பகலும் துஞ்சார்,
விரை மலர் வாளியொடு கருப்பு வில் ஏந்தி,
மகர வெல் கொடி மைந்தன், திரிதர -
நகரம் காவல் நனி சிறந்தது - என்.

வெண்பா




கூடினார்பால் நிழல் ஆய், கூடார்பால் வெய்யது ஆய்,
காவலன் வெண்குடை போல் காட்டிற்றே - கூடிய
மாதவிக்கும், கண்ணகிக்கும், வான் ஊர் மதி விரிந்து
போது அவிழ்க்கும் கங்குல் - பொழுது.