பதிகம்


துன்ப மாலையும் நண்பகல் நடுங்கிய
ஊர்சூழ் வரியும் சீர்சால் வேந்தனொடு


78
உரை
79

        நண்பகல் நடுங்கிய ஊர் சூழ் வரியும் - நண்பகற் பொழுதில் எல்லாருங் கண்டு நடுங்குமாறு கண்ணகி ஊரினைச் சூழ்வந்த ஊர் சூழ் வரியும்,

       நடுங்கிய, செய்யிய வென்னும் எச்சம்; கண்ணகி நடுங்கிய என்று மாம். கண்ணகி நாணிறந்து வெளிப்பட்டு ஊர் சூழ வருவதனைப் பத்தினிப் பெண்டிர் கண்கூடாகக் காண்டலின் இஃ ஊர் சூழ் வரியாயிற்று.

      இதுவும் கூத்தாற் பெற்ற பெயரென்பர்.