பதிகம்


80
ஊர்சூழ் வரியும் சீர்சால் வேந்தனொடு
வழக்குரை காதையும் வஞ்சின மாலையும்


79
உரை
80

       சீர்சால் வேந்தனொடு வழக்கு உரை காதையும் - புகழமைந்த பாண்டியனோடு கண்ணகி வழக்குரைத்த காதையும்,

       உரை காதை - வினைத்தொகை ; இறந்த காலம்.

       வஞ்சின மாலையும் - தானுரைத்த வழக்குந் தோற்று உயிருந்தோற்ற நெடுஞ்செழியன் தேவியை நோக்கிக் கண்ணகி வஞ்சினங் கூறிய இயல்பும்,

        மாலை - இயல்பு.