|
85
|
வாழ்த்து வரந்தரு காதையொடு |
|
வாழ்த்து
- பத்தினிக் கடவுள் செங்குட்டுவனை வாழ்த்தின காதையும்,
வரம் தரு காதையொடு - அங்ஙனம் வாழ்த்திய கடவுள் செங்குட்டுவற்கும்
அங்கு வந்திருந்த மன்ன ரனைவர்க்கும் வரங் கொடுத்த காதையும்,
ஒடு, அசை ; எண்ணொடுவுமாம். தருதல் - கொடை ; இடவழு வமைதி.
1"காட்சி
கால்கோள் நீர்ப்படை நடுகல் சீர்த்தகு சிறப்பிற் பெரும்படை வாழ்த்தலென் றிருமூன்று
வகையிற் கல்லொடு."
என்பதும், அதற்கு நச்சினார்க்கினியர் எழுதிய உரையும்
ஈண்டு அறியற்பாலன.
|
1.
தொல். பொருள். சூ. 60.
|
|