8. வேனிற் காதை

 

திறந்து வழிப்படூஉந் தெள்ளிசைக் கரணத்துப்
புறத்தொரு பாணியிற் பூங்கொடி மயங்கிச்


43
உரை
44

          திறத்து வழிப்படூஉம் தெள்ளிசைக் கரணத்து - அவற்றின் வழிப்படும் திறப்பண்களைப் பாடுதல் செய்யுமிடத்து, புறத்து ஒரு பாணியிற் பூங்கொடி மயங்கி - நெஞ்சு கலங்கினாளாதலின் எடுத்த பண்ணுக்குப் புறமாகியதோ ரிசையிலே அவள் மயங்கி;

          வழிப்படூஉந் திறத்தென மாறுக. தெள்ளிசைக் கரணம் யாழினும் மிடற்றினும் பாடுஞ் செய்கை. புறத்தொரு பாணியில் என்பதற்குப் புறநிலை மருதப் பண்ணில் என்றும், புறநீர்மை யென்னுந் திறத்தில் என்றும் உரைப்பாருமுளர்.