8. வேனிற் காதை


85

அந்தி மாலை வந்ததற் கிரங்கிச்
சிந்தைநோய் கூருமென் சிறுமை நோக்கிக்
கிளிபுரை கிளவியும் மடவன நடையுங்
களிமயிற் சாயலுங் கரந்தன ளாகிச்
செருவேல் நெடுங்கண் சிலதியர் கோலத்து
ஒருதனி வந்த உள்வரி யாடலும்


84
உரை
89

         அந்தி மாலை வந்ததற்கு இரங்கி - யான் ஊடிப் பிரிந்த காலத்து அந்தி மாலை வந்ததாகப் பிரிவாற்றாமையால் இரங்கி, சிந்தை நோய் கூரும் என் சிறுமை நோக்கி - சிந்தையில் நோய் மிகும் என் வருத்தத்தை நோக்கி, கிளி புரை கிளவியும் - கிள்ளையை யொத்த சொல்லையும், மட அன நடையும் - மடப்பத்தை யுடைய அன்னமன்ன நடையினையும், களிமயிற் சாயலும் - களிப்பையுடைய மயில்போலுஞ் சாயலினையும், கரந்தனள் ஆகி - மறைத்தவளாகி, செருவேல் நெடுங்கட் சிலதியர் கோலத்து - போர்புரியும் வேல்போன்ற நெடிய கண்ணை யுடைய சிலதியர் கோலத்தைக் கொண்டு, ஒரு தனி வந்த உள்வரி ஆடலும் - தான் தனியே வந்து நின்று நடித்த உள்வரி யென்னும் நடிப்பும்;

         சிலதியர் - ஏவற்பெண்டிர்; சிறு குறுந்தொழிலியர். உள்வரி - வேற்றுருக்கொள்ளுதல்.