|
90
|
சிலம்புவாய் புலம்பவும்
மேகலை யார்ப்பவுங்
கலம்பெற நுசுப்பினள் காதல் நோக்கமொடு
திறத்துவே றாயவென் சிறுமை நோக்கியும்
புறத்துநின் றாடிய புன்புற வரியும்
|
|
சிலம்பு
வாய் புலம்பவும் மேகலை ஆர்ப்பவும் - சிலம்பு வாய்விட்டுப் புலம்பவும் மேகலை வாய்விட்டு
ஆர்ப்பவும், கலம் பெறா நுசுப்பினள் - கலங்களைப் புனையவும் பெறாத இடையினை யுடையாள்,
காதல் நோக்கமொடு - காதலையுடையாள்போல் நோக்கிய நோக்கோடே, திறத்து வேறாய என்
சிறுமை நோக்கி யும் - தன்னைப் பிரிதலால் இயல்பு திரிந்த என் வருத்தத்தை யறிந்தும்,
புறத்து நின்று ஆடிய புன் புற வரியும் - என்னுடன் அணையாது புறம்பே நின்று நடித்த புல்லிய
புற நடிப்பும்;
நுசுப்பினள் புலம்பவும்
ஆர்ப்பவும் நோக்கமொடு நோக்கியும் ஆடிய வரியுமென்க. கலம் பொறா என்பது பாடமாயின்
கலத்தினைச் சுமக்கலாற்றாத என்க.
|
|