8. வேனிற் காதை

105

வண்டலர் கோதை மாலையுள் மயங்கிக்
கண்டவர்க் குரைத்த காட்சி வரியும்

105
உரை
106

         வண்டு அலர்கோதை - வண்டுகளால் அலர்த்தப்படும் பூங்கோதையினை யுடையாள், மாலையுள் மயங்கி - மாலைப் பொழுதிலே மயங்கி, கண்டவர்க்கு உரைத்த காட்சி வரியும் - காணப்பட்ட கிளைகள் யாவர்க்கும் தன் பிரிவுத் துன்பத்தைச் சொல்லி நடித்த நடிப்பும்;