|
115
|
மாலை வாரா ராயினும் மாணிழை
காலைகாண் குவமெனக் கையறு நெஞ்சமொடு
பூமலர் அமளிமிசைப் பொருந்தாது வதிந்தனள்
மாமலர் நெடுங்கண் மாதவி தானென்.
|
|
மாலை
வாரார் ஆயினும் - இன்னும் மாலைப்பொழுதினுள் வருவார்; அங்ஙனம் வாராராயினும், மாண்இழை
- மாட்சிமைப்பட்ட அணியினையுடையாய், காலை காண்குவம் என - காலைப் பொழுதில் ஈண்டு
நாம் காண்போமெனச் சொல்லி, கையறு நெஞ்சமொடு - செயலற்ற மனத்தோடு, பூமலர் அமளிமிசைப்
பொருந்தாது வதிந்தனள் - தானிருந்த அழகிய மலரமளியின்மீதே வீழ்ந்து இமை பொருந்தாமற்
கிடந்தனள், மா மலர் நெடுங்கண் மாதவி தான் என் - கரிய மலர்போலும் நெடிய கண்ணையுடைய
மாதவிதான் என்க.
வாராராயினும் என்றது வருவாரென்னும்
பொருளை அடக்கி நின்றது. காலையில் ஒருதலையாக வருவாரென்பாள் காண்குவம் என்றாள். தான்,
என் - அசைகள்.
இது நிலைமண்டில வாசிரியப்பா.
|
|