8. வேனிற் காதை

2

ஊடினீர் எல்லாம் உருவிலான் றன்ஆணை
கூடுமின் என்று குயில்சாற்ற -- நீடிய
வேனற்பா ணிக்கலந்தாள் மென்பூந் திருமுகத்தைக்
கானற்பா ணிக்கலந்தாய் காண்.


2
உரை
2

         (ஊடினீரெல்லாம்.........காண்) ஊடினீர் எல்லாம் - உலகில் ஒருவனும் ஒருத்தியுமாயுள்ளோரின் ஊடினவர்களே நீயிரெல்லாம், உருவிலான்றன் ஆணை - அநங்கன் ஆணை, கூடு மின் என்று குயில் சாற்ற - கூடுவீராக வென்று குயிற்குலங்கள் சாற்ற, நீடிய வேனற் பாணிக் கலந்தாள் - இளவேனிற் பொழுதில் நின்னோடு என்றும் கலந்தவளுடைய, மென் பூந் திரு முகத்தை - மெல்லிய பூவிலெழுதிய திருமுகத்தை, கானற் பாணிக்கு அலந்தாய் காண் - கானலிடத்து அவள் பாடிய பாட்டிற்கு வருந்தினவனே காண்பாயாக;

         நீடிய கானற்பாணி என்றுமாம். பாணி இரண்டனுள் முன்னது பொழுது; பின்னது பாட்டு. இதனைக் காணென்று ஓலையை நீட்டினாள் என்க.
                     வேனிற் காதை முற்றிற்று.