8. வேனிற் காதை

 

25

அதிரா மரபின் யாழ்கை வாங்கி
மதுர கீதம் பாடினள் மயங்கி
ஒன்பான் விருத்தியுள் தலைக்கண் விருத்தி
நன்பால் அமைந்த இருக்கைய ளாகி


23
உரை
26

         (அதிராமரபின்............இருக்கையாளாகி) ஒன்பான் விருத்தியுள் தலைக்கண் விருத்தி - ஒன்பது வகைப்பட்ட இருப்பினுள் முதற்கண்ணதாகிய, நன்பால் அமைந்த இருக்கையள் ஆகி - பதுமாசனம் என்னும் நன்மை யமைந்த இருப்பினை யுடையளாய், அதிரா மரபின் யாழ் கை வாங்கி - கோவை கலங்காத மரபினையுடைய யாழைக் கையில் வாங்கி, மதுர கீதம் பாடினள் மயங்கி -மிடற்றாலே முற்பட மதுர கீதமாகப் பாடி அது மயங்கிக் கலத்தாற் பாடத் தொடங்கினவள் ;
         இருக்கையளாகி வாங்கிப் பாடினள் மயங்கி என மாறுக. விருத்தி - இருப்பு. நிற்றல் இருத்தல் கிடத்தல் இயங்குதல் என்பவற்றுள் இருத்தலின் பிரிவாகிய திரிதர வில்லா விருக்கை ஒன்பது வகைப்படும். அவை: பதுமுகம், உற்கட்டிதம், ஒப்படி இருக்கை, சம்புடம், அயமுகம், சுவத்திகம், தனிப்புடம், மண்டிலம், ஏகபாதம் என்பன. இவற்றுள் முதற்கண்ணதாகிய பதுமுகம் என்பதே தலைக்கண் விருத்தி யெனப்பட்டது. பதுமுகம் - பதுமாசனம். மேல் யாழாற் பாடுதல் கூறப்படுதலின் ஈண்டுப் பாடியது கண்டத்தா லென்பது பெற்றாம்.
.