|
70 |
பாடமை சேக்கையுட் புக்குத்தன்
பைந்தொடி
வாடிய மேனி வருத்தங்கண் டியாவுஞ்
சலம்புணர் கொள்கைச் சலதியொ டாடிக்
குலந்தரு வான்பொருட் குன்றந் தொலைந்த
இலம்பாடு நாணுத் தருமெனக் கென்ன |
|
கோவலனும்
- அங்ஙனம் வாயிலிடத்தானான கோவலனும், பாடு அமை சேக்கையுட் புக்கு - பெருமையமைந்த
படுக்கையிடத்தே புக்கு, தன் பைந்தொடி வாடிய மேனி வருத்தம் கண்டு - தன் காதலியின்
வாட்ட முற்ற மேனியும் வருத்தமும் கண்டு, யாவும் - எல்லாம், சலம் புணர் கொள்கைச் சலதியொடு
ஆடி - வஞ்சம் பொருந்திய கொள்கையையுடைய பொய்த்தியோடுங் கூடியொழுகினமையால், குலம்
தருவான் பொருட்குன்றம் தொலைந்த - நம் குலத்திலுள்ளார் தேடித் தந்த மலைபோலும் பெரிய
பொருட்குவையெல்லாம் கெட்டதனாலாய, இலம்பாடு - வறுமை, நாணுத் தரும் எனக்கு என்ன - எனக்கு
நாணைத் தருகின்றது என்று கூற ;
"மாலை மணிவிளக்கங் காட்டி இரவிற்கோர்,
கோலங் கொடியிடையார் தாங்கொள்ள" அக் காலத்தே வந்து சேக்கையுட் புக்கு என்றியைத்
துரைக்க. சலம் - வஞ்சம், பொய். இலம்பாடு - இல்லாமையுண்டாதல் ; வறுமை. கெட்டால்
மதிதோன்றும் என்றதற்கேற்ப இன்று நாணுத் தருமென்றான். |
|