|
|
பார்ப்பா னொடுமனையா
ளென்மேற் படாதனவிட்
டேற்பன கூறாரென் றேங்கி மகக்கொண் |
|
மாலதியும்-,
பார்ப்பானொடு மனையாள் - பார்ப்பானும் அவன் மனைவியும், என்மேல் படாதன விட்டு -
என்மேல் அடாப்பழி கூறுத லொழிந்து, ஏற்பன கூறார் என்று ஏங்கி - ஏற்பன கூறாராதலால்
இதற் கென்செய்கேனென்று ஏங்கி, மகக் கொண்டு - அம் மகவை யெடுத்துக்கொண்டு ;
பார்ப்பான் - கணவன். ஒடு - எண்ணொடு.
படாதன - இல்லாதன ; அடாதன. கூறுதலென ஒரு சொல் விரிக்க. படாதன இட்டு எனப் பிரித்து,
அடாதவற்றைச் சுமத்தி யென்றுரைத்தலுமாம். |
|