உரையாட் டில்லை யுறுதவத் தீர்யான்
மதுரை மூதூர் வரைபொருள் வேட்கையேன
50
உரை
51
உரையாட்டு
இல்லை உறுதவத்தீர் யான் மதுரை மூதூர் வரை பொருள் வேட்கையேன் - மிக்க தவத்தினை யுடையீர்
இவ் வினாவிற்கு யான் சொல்லத்தக்க தொன்றில்லை ஆயினும் மதுரை மூதூரிற் சென்று பொருளீட்டும்
வேட்கையை உடை யேனாயினேன் என்று கூற ;
"1
சென்ற கலனோடு உலந்த பொருளீட்டுதலுற்றேன்" என இவன் முன்னர்க் காதையில் கூறியவதனால்
'வரை பொருள்' என் பதற்குத் தான் தேடுவதாக அறுதி செய்து கொண்ட பொருள் என்க. எனவென
ஒரு சொல் வருவிக்க. இனிக் கவுந்தியடிகள் கூறுவார்.