10. நாடுகாண் காதை


75

மஞ்சளு மிஞ்சியு மயங்கரில் வலயத்துச்
செஞ்சுளைப் பலவின் பரற்பகை யுறுக்கும்



74
உரை
75

       மஞ்சளும் இஞ்சியும் மயங்கு அரில் வலயத்து - மஞ்சளும் இஞ்சியு முதலியன தம்முள் கலந்த பிணக்கத்தினையுடைய தோட்டங்களில், செஞ்சுளைப் பலவின் பரற்பகை யுறுக்கும் - பலாவின் செவ்விய சுளைகளிலுள்ள விதையாகிய பருக்கைகள் பகையாய் உறுத்தலைச் செய்யும் ;

       வலயம் - பாத்தியுமாம். பலாவின் அடிக்கீழ் மஞ்சள் முதலியன பயிரிடல், 1 "பைங்கறி நிவந்த பலவி னீழல், மஞ்சண் மெல்லிலை" என வருதல்கொண் டுணர்க. உறுக்கும் - உறுத்தும்.

1. சிறுபாண், 43-4.