|
|
கயனெடுங் கண்ணி காதற் கேள்வ
வயலுழைப் படர்குவ மெனினே யாங்குப்
|
|
கயல்
நெடுங் கண்ணி காதற் கேள்வ - சேலை யொத்த நீண்ட கண்களையுடைய கண்ணகிக்கு அன்பு நிறைந்த
கணவனே, வயலுழைப் படர்குவம் எனினே - வயல் நெறியே செல்வேமாயின் ;
முன்னர்க் கோவலன் என விளித்து மீட்டும்
ஈண்டு "கயனெடுங் கண்ணிகாதற் கேள்வ" என விளித்தது, முன்னர்க் கூறியன நினக்கும் ஏதம்
தருவன ; பின்னர்க் கூறுவன நினக்கு எத்தகைய அச்சத்தையும் செய்யாவிடினும், கடைகழிந்தறியா
இக் காரிகைக்கு அச்சம் விளைக்கும்; அது நினைக்குப் பொறுத்தற்கரிதாகும் என்பதறிவித்தற்
கென்க.. |
|