10. நாடுகாண் காதை



100

தோமறு கடிஞையுஞ் சுவன்மே லறுவையும்
காவுந்தி யையைகைப் பீலியுங் கொண்டு

மொழிப்பொருட் டெய்வம் வழித்துணை யாகெனப்
பழிப்பருஞ் சிறப்பின் வழிப்படர் புரிந்தோர்



98
உரை
101

        தோம் அறு கடிஞையும் சுவல்மேல் அறுவையும் காவுந்தி யையை கைப் பீலியும் கொண்டு - கவுந்தியடிகள் குற்ற மற்ற பிச்சைப் பாத்திரத்தையும் தோளிலிடும் உறியையும் மயிற்றோகையையும் கொண்டு, மொழிப் பொருள் தெய்வம் வழித்துணை ஆகென - பொருண் மொழியாகிய தெய்வம் யாம் செல்லும் நெறிக்கண் துணையாகவென்று, பழிப்பரும் சிறப்பின் வழிப்படர் புரிந்தோர் - பழிப்பில்லாத பெருமையினையுடைய ஒழுக்கத்தொடு வழிச் செலவைப் புரிந்தோராகிய அவர்கள் ;

        தோம் - குற்றம். பொருண்மொழியென மாறுக. தெய்வமாவது பஞ்சமந்திரம் ; அ சி ஆ உ சா என்பன. கொண்டு என்பதனைக் கொள்ளவெனத் திரித்துத் துணையாக வென்றதனைக் கோவலன் கண்ணகி கூற்றாக்கலுமாம். படர் - செல்கை ; முதனிலைத் தொழிற் பெயர். புரிந்தோர் - வினைப்பெயர்.