|
10 |
அணிகிள ரரவின் அறிதுயி லமர்ந்த
மணிவண்ணன் கோட்டம் வலஞ்செயாக் கழிந்து
|
|
அணிகிளர்
அரவின் அறிதுயில் அமர்ந்த - அழகு விளங்கும் அரவணையின்மீது அறிதுயிலைப் பொருந்திய,
மணிவண்ணன் கோட்டம் வலம்செயாக் கழிந்து - நீலமணிபோலும் நிறமுடையோனாகிய திருமாலின்
கோயிலை வலம் செய்து நீங்கி ; மணிவண்ணன் என்பது பெயருமாம். அறி துயில்-யாவற்றையும்
அறிந்துகொண்டே துயிலுதல் ; துயிலுதல் - பதைப்பின்றி யிருத்தல் ; இதனை யோக நித்திரை
என்பர். |
|