10. நாடுகாண் காதை



தெண்கிணைப் பொருநர் செருக்குட னெடுத்த
மண்கணை முழவின் மகிழிசை யோதையும்



138
உரை
139

        தெண்கிணைப் பொருநர் செருக்குடன் எடுத்த - தெளிந்த ஓசையினையுடைய தடாரியினையுடைய கிணைப்பொருநர் செருக்குதலோடெடுத்த, மண்கணை முழவின் மகிழ் இசை ஓதையும் - மார்ச்சனையையுடைய திரண்ட முழவினது மகிழ்ச்சியைத் தரும் இசையின் ஒலியும் ;

இது களவழி வாழ்த்து ; என்னை ? "1 தண்பணை வயலுழவனைத், தெண்கிணைவன் திருந்துபுகழ் கிளந்தன்று" என்றாராகலின்.

1. பு. வெ. வாகை, 32.